Quantcast
Channel: அகாதுகா அப்பாடக்கர்ஸ்:
Viewing all 74 articles
Browse latest View live

சந்தானம் இனிமே "அவ்வளவு"தானா? 2013ல் நடந்தது என்ன?

$
0
0
என்னாச்சி!
 சந்தானம் இனிமேல் அவ்வளவுதான்! சந்தானத்துக்கு என்னாச்சு! சந்தானம் "டொக்"ஆயிட்டாருய்யா! அதுதான் நம்மாளு வடிவேலு வந்தாச்சுல்ல இனிமேதான் இருக்குடி சந்தானதுக்கு! ஒரிஜினல்  கவுண்டமணியே ரிட்டர்ன் ஆகிட்டாரு, டூப்ளிகேட் சந்தானம் இனிமே மூட்டைய கட்ட வேண்டியதுதான்! எத்தன நாளைக்குதான் ஒன் லைனர்ஸ், டபுள் மீனிங் டயலாக்ஸ்ஸயே வச்சே ஒப்பேதுறது! அடுத்த வருஷம் சூரிதான் காமெடில பட்டைய கெளப்ப போறாரு, சந்தானம் பீரியட் ஓவர்! 

2013ம் ஆண்டில் இப்புடி எத்தனை விமர்சனங்கள் சந்தானத்தின் மீது! உண்மைலேயே சந்தானம் பீல்ட் அவுட் ஆயிட்டரா? அவருகிட்ட சரக்கு தீர்ந்துடுச்சா?ன்னு "அகாதுகா அப்பாடக்கர்ஸ்""ரியல் சந்தானம் ஃபேன்ஸ்"பிரபல பதிவர்களாகிய நமக்கே ஒரு டவுட்டு! அதுனால அது சம்பந்தமா ஒரு ஆண்டிறுதி போர்மாலிட்டி பதிவு.

சந்தானம் நடித்து 2013ல் வெளிவந்த படங்களின் சோர்டெட் லிஸ்ட்டு வித் மினி அனாலிசிஸ்!

  • தீயா வேலை செய்யனும் குமாரு: படம் காமெடி ஹிட்டு, சந்தானம் காமெடி நல்லாவே இருந்துச்சு!
  • கண்ணா லட்டு தின்ன ஆசையா: 2013ல் சந்தானம் நடித்து வெளிவந்த முதல் படம் மட்டுமல்ல, சந்தானம் தயாரிப்பில் வெளிவந்த முதல் படம் கூட! பவர் ஸ்டார்+சந்தானம் அலம்பல்கள், இ.போ.நா.வா கதை,திரைகதை, மற்றும் சந்தானத்துக்கு அந்த டைம்ல இருந்த டிமாண்ட், அப்புறம் அது கூட வந்த மத்த படங்களுக்கு இதுவே மேல், போன்ற காரணிகளால் படம் ஹிட்டு!
  • சிங்கம் 2:ஹரி படம்! ஹிட்டு! சந்தானம் காமெடி ஒன்னும் அவ்வளவு ஸ்பெஷல் கெடையாது! பட் ஓகே ரகம்!
  •  ராஜா ராணி: ஒட்டு மொத்த படமே சில சுவாரசிய காட்சிகளின் தொகுப்பு, காமெடியும் ஓகே!
  • தலைவா: இந்த படம் நூறு நாள் ஒடுச்சாம், ஆனால், ஹிட்டா இல்லையானு தெரியல! நமக்கென்னமோ, இந்த படத்துல சந்தானம் காமெடிய விட இளைய தளபதி விஜய் பண்ண சீரியஸ்காமெடிக்கு செமையா சிரிப்பு வந்துச்சு!
  • யா யா , தில்லு முல்லு, வணக்கம் சென்னை: சிவா+சந்தானம் கூட்டணி ஒன்னு சேர மாட்டார்களான்னு அவுங்க ரெண்டு பேருகிட்டையும் ஒவ்வொரு டிவி இண்டர்விவ்லயும் ஏதோ விஜய்+அஜித் ரேஞ்சில் கேட்கப்படும். கலகலப்பில் ஏற்கனவே இணைந்திருந்தாலும், இணைப்பு காட்சிகள் குறைவு! ஆனால், சேர்ந்தால் படம் எவ்வளவு மொக்கையா இருக்கும்னு இந்த படங்களே சாட்சி! 
  • சேட்டை: டெல்லி பெல்லியின் மிக மோசமான தமிழாக்கம்! ஒவ்வொரு காமெடிக்கும் சிரிப்பே வரல!
  • பட்டத்து யானை:சாரி, இந்த படத்தை பார்க்கும் மனநிலையில் நாம இருக்கல! இதுவும்  மொக்கையாம்!
 அப்புறம் அப்புறம் அப்புறம்.... ஹீ ஹீ....
  • அலெக்ஸ் பாண்டியன்:  சுராஜ் செம மொக்க டைரக்டர்! மாப்பிளை படத்துலயே செம மொக்க வாங்குனாரு! இந்த டைரக்டர்கிட்ட சரக்கே இல்லங்குறதுக்கு இந்த படமும் ஒரு சாட்சி! காமெடின்னு பார்த்தாலும்  ஆபாசம் மட்டுமே!
நமக்கு தெரிஞ்ச அளவுக்கு, இவற்றை தவிர வேறு எதாவது சந்தானம் நடித்த படங்கள் இந்த ஆண்டில் வெளிவந்ததான்னு தெரியல! அப்புடியே வெளிவந்தாலும, அப்புடி ஒன்னும் பெருசா ஹிட் ஆனா மாதிரி தெரியல! ஆக, கூட்டி கழித்து பார்த்தால், ரெண்டே ரெண்டு படங்கள்! தீ.வே.செ.கும் க.ல.தி.ஆம் மட்டுமே சந்தானம் ரசிகர்களுக்கு ஏமாற்றமளிக்காத படங்கள்!

இது தொடர்பாக டீடெயில்ட் அனாலிசிஸ் பண்ணுற அளவுக்கு நான் ஒன்னும் பெரிய சினிமா எக்ஸ்பெர்ட் அப்பாடக்கர் கெடையாதுன்னாலுமே, எனக்கு தெரிஞ்சு சந்தானத்தின் இந்த லெட் டவுனுக்கு என்ன காரணங்கள்ன்னு யோசிச்சு பார்த்தால்..
 இப்போ சமீபத்துல ரெண்டு வருசத்துக்கு முன்னாடிதான் இவரு பீக்குக்கு வந்தாரு. பல கமர்சியல்  டைரக்டர்களும் பிசினஸ்க்காக படத்தின் கதையில் எப்புடியாவது சந்தானத்தை நுழைச்சுறாங்க. நம்மாளும் இதுதான் டைம், இத விட்டா பிற்காலத்துல இந்த அளவுக்கு சம்பாதிக்க முடியாதுன்னு, ஒரு நாளைக்கு பல லட்சங்கள்ன்னு கால்ஷீட் கொடுத்து ஒய்வில்லமா நடிச்சிகிட்டு இருக்காரு. அது போக, வர்ற பணத்துல பாதி பணம் கருப்பு பணம், ஐ.டி டிப்பார்ட்மென்ட் கொடுக்குற குடைச்சல்கள். இத ஏன், சொல்றேன்னா, மற்றைய நடிகர்களவிட காமெடி நடிகர்களுக்கு சொந்த சரக்கும் கிரியேட்டிவிட்டி மூளையும் ரொம்ப அவசியம். மனுஷன்  பிஸியாவும்,   ஸ்ட்ரெஸ்ஸாவும் இருந்தா கிரியேட்டிவ்வா வேலை செய்ய முடியாது. பொதுவா ஒவ்வொரு காமெடி நடிகரும், எழுந்ததும் வீழ்ந்ததும் இந்த ஒரே காரணத்துனாலதான்.

எந்த ஒரு காமெடி நடிகருக்குமே லாங் லாஸ்டிங் பீக் டைம் இருந்தது கெடையாது. நம் அனுபவத்தில் நாம் பார்த்த, கவுண்டமணி+செந்தில் கூட்டணியின் வெற்றி, அதன் பின் கவுண்டர் தனித்து, செந்தில் தனித்து, வடிவேலுவின்  ஆரம்ப கால கட்டங்கள், அப்புறம் மணிவண்ணனின் எழுச்சி,  2000ன் ஆரம்பகளில் விவேக் அலை அடித்து ஓய்ந்தது! அப்புறம் "வின்னர்", "கிரி"க்கப்புறம் வடிவேலுவின் இரண்டாம் இன்னிங்க்ஸ். ஒரு கட்டத்துக்கு பின் வடிவேலுவின் வெற்றிகரமான இரண்டாம் இன்னிங்க்ஸ் நமக்கு போரடித்து கொண்டு வர ஆரம்பிக்கும் போதே, அவராவே வான்டட்டா தகறாரு பண்ணி பீல்ட் அவுட்! அதன் பின் இப்போ சந்தானம்!
 நீ பார்க்காத தோல்வியா, நீ பார்க்காதவெற்றியா? தல!
சந்தானம் பீல்ட் அவுட்டானப்புறமும் ரசிகர்கள் மனசுல நிலைச்சு நிற்கனும்ன்னா, நல்ல காமெடி சென்ஸ் உள்ள டைரக்டர்ஸ் கூட சேர்ந்து கொஞ்சம் அவரோட சரக்கையும் சேர்த்து ஒர்க் அவுட் பண்ணலாம். படங்களின் எண்ணிகைய விட, காமெடியின் தரத்தில் கவனம் செலுத்தலாம். வெறும் டயலாக்ஸ விட்டுட்டு ஓகே ஓகே மாதிரி வித்தியாசமான பாடி லாங்வேஜ்களில் கவனம் செலுத்தலாம். அது போக, இப்போ தியேட்டருக்கு காமெடி படம் பார்க்க வர்ற இளைஞர்கள் பலர்  மொக்க காமெடிய விட டார்க் ஹியூமர், பிளாக் காமெடி என சொல்லப்படும் மூடர்கூடம், ந.கொ.ப.கா, சூது கவ்வும் போன்ற காமெடிகளையே ரொம்ப ரசிக்கிறாங்க (எல்லாருமே அப்புடியான்னு தெரியல, ஆனால் நாங்களும் யூத்து அன்ட் நாங்க அப்புடிதான், ஹீ ஹீ ) சந்தானத்தால  அத பண்ண முடியுமான்னு தெரியல, பட் ட்ரை பண்ணி பார்க்கலாம்.
 இவ்வளவு சொல்லி என்ன ஸார் பயன்! சந்தானம் இத வாசிக்கவே போறது இல்லல. ஓகே, காசு வருது, நல்லா பணம் சம்பாதித்துகொண்டே நமக்கு புடிச்ச மாதிரி, கொஞ்சம் ரசிக்கிற மாதிரி அடுத்த வருசமாவது சில நல்ல காமெடி படங்களில் நடிப்பார்ன்னு நம்புவோமாக!

போனஸ்  ஸ்டில்:
நம்ம சந்தானமாய்யா  இது! என்றென்றும் புன்னகை ஸ்டில்!

ஜில்லா - திரை விமர்சனம்

$
0
0
நம்ம கடை திறக்கனும்னா, ஒரு தமிழ்படம் நம்ம ஏரியாவுல ரிலீஸ் ஆகனும். அதாவது ஒரு நல்ல நாள், பண்டிகைன்னு ஏதாவது வரனும். அந்த சட்டத்துக்கு அமைய, பொங்கல் நாள் வர்றதால, நம்ம கடை சார்பாக இந்தமுறை ஜில்லா விமர்சனம்.


துப்பாக்கி எனும் மெகா ஹிட்டுக்கும், தலைவா எனும் ஏமாற்றத்துக்கும் பின்னர் இளைய தளபதி நடிப்பில், காஜல் அகர்வால், மோகன்லால் உட்பட பல நட்சத்திர கூட்டணியில், தலையின் வீரத்துடன் போட்டியிட, RB சவுத்ரியின் தயாரிப்பில் களமிறங்கியிருக்கும் மாஸ் ஆக்ஷன் மசாலா இந்த ஜில்லா. தப்பு பண்ணினதுக்காக அடிக்கல, அந்த தப்ப நாங்க மட்டுமே பண்ணணும், அதுதான் அடிச்சேன், என்கிற அழகிய கொள்கையோடு, குடும்பமாக வுடியிஸம் பண்ணும் ஒருவன், எதிர் முனையில் இருந்து தன்கூட்டத்தார் செய்யும் தப்புக்களை காண நேர்ந்தால்... எனும் கற்பனையே ஜில்லா. இது ஒரு நல்ல இயக்குனர் கையில் நாயகன் இரண்டாம் பாகமாகவோ, அல்லது ஒரு ஆர்வக்கோளாறு இயக்குனர் கையில் தலைவா இரண்டாம் பாகமாகவோ ஆக சாத்தியமுள்ள கற்பனைதான். நல்ல வேளையாக ஜில்லா டீமுக்கு உலகப்படம் எடுக்கும் விபரீத ஆசை இல்லாததால், இது ஒரு ஆக்ஷன் என்டர்டைனர் வரிசையில் சேர்க்கிறது.  இந்த மசாலாவை எப்படிப் பறிமாறி இருக்கிறார்கள், அதில் வெற்றி பெற்றார்களா இல்லையா என்பதை இனி பார்க்கலாம்.

விஜய், மகேஷ் பாபு, சல்மான் கான் இந்த மூவருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. அதாகப்பட்டது, கதையோ, திரைக்கதையோ எப்படி இருந்தாலும் இவர்கள் புல் ஃபோர்மில் இருந்தால் படம் தப்பிக்கும். இங்கும் அப்படித்தான். படம் முழுவதும் விஜய் ஆட்சி. ரொம்ப நாளைக்கு அப்புறமா விஜய் புல் ப்ரீயா நடிச்சிருக்காரு. வழக்கமான சேட்டைகள், டைமிங், சின்னச் சின்ன ரியாக்ஷன், முக்கியமா அந்த விஜய் ஸ்மையில் எல்லாமே முழு வீச்சுல இருக்கு. படம் முதல் பாதி பார்க்கும் போது, மறுபடியும் விஜய்க்கே மாறிடலாமான்னு ஒரு கணம் தோணினாலும், இரண்டாம் பாதி அந்த விபரீத முடிவுல இருந்து நம்மள காப்பாத்துது. ரொம்பவே ஸ்ட்றாங்கா இருந்திருக்கக் கூடிய, அல்லது குறைந்த பட்சம் சிவகாசி மாதிரி வந்திருக்க வேண்டிய இரண்டாம் பாதி, அது யாரு தப்புன்னு தெரியல, மறுபடியும் ஒரு வில்லு ரேஞ்சுல, ஒரு பைட் சீன், அப்புறமா மொக்கையா ஒரு பாட்டு, அப்புறம் மொக்கையா ஒரு கமெடி சீன், மறுபடியும் ஒரு மொக்கையா அக்ஷன் ப்ளாக்ன்னு, ஒரு நேர் கோட்டுல ரொம்ப மொக்கையா போய்க்கிட்டே இருக்கு. விஜய் எவ்வளவு ட்ரை பண்ணியும் காப்பாத்த முடியாத கட்டத்துல இருக்கு இரண்டாம் பாதி படம். இதுல சோகம் என்னன்னா ரெண்டாம் பாதி முடியறப்போ, ஒரு செம ஜாலியான முதல் பாதி படத்துல இருந்ததே நமக்கு மறந்திடுது.


பிளாஸ் அண்ட் மைனஸ்

1.    விஜய் விஜய் விஜய். முதல் பாதி முழுவதும் செம அட்டகாசம், அந்த அறிமுக காட்ச்சியில இருந்து போலீஸ் ஆகும் வரைக்கும் மனுஷன் பிச்சி வாங்கி இருக்காரு. அப்புறமும் ரெண்டாம் பாதியிலதான் என்ன பண்றது, எப்படி பண்றதுன்னு குழம்பிப் போனாலும், ஃபயிட், டான்ஸ் என தனது ஏரியாவுல செமையா ஸ்கோர் பண்ணிட்டதால ஹார்ட்கோர் விஜய் ரசிகர்கள் ஹேப்பி அண்ணாச்சி.2.  மோகன்லால் எதுக்கு இந்தப் படத்துக்குங்கற கேள்விக்கு கடைசிவரை எனக்கு விடை கிடைக்கவே இல்லை. மோகன்லால் அவரு பணிய சரியாவே செஞ்சிருக்காரு, அதுல எந்த குறையும் இல்ல, குறிப்பா, ஒபெனிங்க் சாங்க்ல விஜய் முன்னாடி, தனது ப்ரசன்சை மெயிண்டயின் பண்ணும் போதே ஒரு நடிகராக நம்ம மனசுல நின்னுடறார். போதுமான ஸ்டையில், அளவான எமோசன்ஸ் என கச்சிதமான நடிப்பு. பட் மோகன் லால் இருப்பதாலோ என்னவோ, இரண்டாம் பாதி படம் கொஞ்சம் டல் அடிக்கிறது. விஜயின் ப்ரீ ஃபாலுக்கு இணையாக சத்தியராஜ் போன்ற ஒரு லொள்ளுப் பார்ட்டி கூட இருந்திருந்தால் படம் இன்னும் அட்டகாசமாக இருந்திருக்குமோ என்னவோ. படத்தை ஒரு மசாலா படமாவே கொண்டு செல்வாதா இல்லை ஒரு உலகப் படமாக எடுப்பாதா என்ற இயக்குனரின் குழப்பத்துக்கு ஒரு வேளை இதுவே காரணாமாக இருந்திருக்கலாம்.


3.     காஜல் அகர்வால் கொஞ்சமும் மாற்றமே இல்லாம அப்பிடியே இருக்காங்க, இது ஒரு பிளாஸ் போன்று தோன்றினாலும், 2007ல இருந்து இன்னிக்கி வரைக்கும் தொடர்ந்து பார்த்து வந்ததுல, எந்த ஒரு சீன் வரும்போது சீனோட அட்மாஸ்பியர் பார்த்தே காஜல், ரியாக்ஷன் நம்பார் 12 குடுப்பாங்களா இல்ல, 17 குடுப்பாங்களான்னு சொல்லிடக் கூடியதா இருக்கறது பெரியவே மைனஸ். என்ன ஒரே ஆறுதல், இப்போவெல்லாம் இந்தப் பொண்ணு சேலை கட்டி வந்தா அது இடுப்புல நிக்கவே மாட்டேங்குது, சோ நாமெல்லாம் ரொம்ப ஹேப்பி அண்ணாச்சி.

5.    செகண்ட் ஆப் ஆரம்பித்ததும் விஜயின் மன மாற்றத்துக்கு காரணமாக வரும் காட்சி வலு இல்லாமல் இருப்பது ரொம்பவே சொதப்பல். ரொம்பவும் உருக்கமான காட்சிதான் அது, அதில் சந்தேகம் இல்லை, ஆனா விஜய் போலீஸ் ஆக முதல் நல்லம நாயக்கர் போன்றிருக்கும் சிவன்,  விஜய் போலீஸ் ஆன மறு கணமே, சிங்கம் மயில் வாகனம் ரேஞ்சுக்கு தெரிவது கொஞ்சமும் ஏற்றுக்கொள்ள முடியாததாக ஆகிறது. ஒரு மாஸ் படமாகவே இருந்த போதும் இந்த மன மாற்றம் இன்னும் கொஞ்சம் கவனமாக கையாளப்படிருக்க வேண்டுமோ என்னமோ.

6.  தம்பி செண்டிமென்ட், தங்கச்சி செண்டிமெண்ட், அம்மா செண்டிமெண்ட், அப்பா செண்டிமெண்ட் ன்னு ஒரே குடும்ப பாச மழை. நட்புக்கு சூரியும், ஊறுகாய்க்கு காஜலும், வில்லனாக சம்பத்தும், என ஒரே நடச்சத்திரப் பட்டளமாகவும், விஸ்தாரனமகாவும் இருக்கும் படம், சில நேரங்களில் எதுக்கு இம்ம்புட்டு பேர், ஒரு மூணு காரக்டர தூக்கி இருந்தா இன்னும் முப்பது நிமிசத்த மிச்சம் புடிச்சிருக்கலாமேன்னு யோசிக்க வைக்குது. போதாக் குறைக்கு ரெண்டே சீனுக்காக தலைவர் சந்தானத்துக்கே ஜோடியா நடிச்ச ரெண்டு ஹீரோயின்கள தேவையே இல்லாம வேஸ்ட் பண்ணி, நம்ம கடுப்ப வேற கெளப்பி, இதெல்லாம் தேவையா?

7.  செம என்டேர்டைனிங்கான முதல் பாதிக்காக இந்தப் படம் கண்டிப்பாக பார்க்கலாம். விஜய் புல் ஸ்விங்குல இருக்கார், ரொம்ப நாளைக்கு அப்புறம், கில்லி, சச்சின்ல பார்த்த அதே இளமைத் துள்ளல், அட்டகாசம், செமயா இருக்காரு மனுஷன். கொஞ்சம் தொப்பை எட்டிப் பார்க்கிறது, அடுத்த படத்துல அதையும் கவனிச்சிட்டா, இன்றைய சினிமாவின் மார்கண்டேயனா வருவதற்கான எல்லா தகுதியும் இந்த ஆளுக்கிட்டதான் இருக்கு.

8.  இசை, ஒளிப்பதிவு இதர விதரங்கள் சொல்லிக்கொள்ளும் படி எதுவும் இல்லை. குறையும் இல்லை, நிறையும் இல்லை.


விஜய் ரசிகர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். மற்றயவர்கள் ஒரு முறை பார்க்கலாம், அல்லது குறைந்த பட்சம்,  டிவிலயாவது ஃபர்ஸ்ட் ஆப் கண்டிப்பாக பார்க்கணும்.

நம்ம ரேட்டிங் 6.5/10. (ஃபர்ஸ்ட் ஆப் 9/10, செகண்ட் ஆப் 4/10)

எல்லோருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள். 

டிஸ்கி:ஒன்ஸ் மோர் படத்துல அப்பன தத்தெடுத்த நம்ம இளைய தளபதி, இந்தப் படத்துல தாத்தாவையே தத்தெடுத்து சாதனை படைச்சிருக்காரு. அதுக்காகவேனும் பாருங்கள்.

டிஸ்கி:  ஏற்கனவே, சிவன்-சக்தி சண்டைய வச்சி, ஒரு பிரபு-சத்யராஜ் படம், ராஜேஷ் படம்,   அப்புறம்    இந்த படம், அதுல டாப்பு "ஒரு குவார்ட்டர் சொல்லேன் மச்சி"தான்!

டிஸ்கி:இங்கு நாம படம் பார்க்கப் போன காம்ப்ளெக்ஸ்ல எதிர் எதிரே ரெண்டு ஸ்க்ரீன்ஸ், ஒன்னுல ஜில்லா, மத்ததுல வீரம். ஜில்லா பார்த்துட்டு வீரம் பார்கலாம்ன்னுதான் இருந்தோம், பட், ஜில்லா முடியும் போது அந்த எண்ணம் சுத்தமா போயிட்டதால, வீரம் பார்க்க முடியல. என்ன ஒரு கவலை, தலைவர் காமெடி செமையா இருக்குன்னு எல்லாருமே, சொல்லும்போது, ஜில்லாவ விட, வீரம் பார்த்திருக்கலாமோன்னு ஒரு எண்ணம் வருது.

**********************************************

பதிவுக் குறிப்பு: 

ஆரம்பத்துலையே சொன்னது போன்று, ஒரே செயல்பாட்டினை இரு வேறு கோணங்களில் இருந்து பார்க்கவும், விவாதிக்கவும், தன்னையும், தன்சார்ந்தவர்களையும் பற்றி சுய பரீசீலனை செய்யவும் என பல வாய்ப்புக்களை கொண்டது படத்தின் கரு. ஒரு நல்ல இயக்குனர் கையில் நாயகன் இரண்டாம் பாகமாக அல்லது நாயகன் படத்தின் மறுபக்கமாக அமைந்திருக்கக் கூடியது. அது ஒரு பொருட்டன்று. அந்த படத்தை ஒரு மாஸ் ஆக்ஷன் படமாக கொடுக்க நினைக்கும் போது, அந்த எல்லைகளுக்குள் மட்டுமே பூரணமாக பயனித்திருந்தால், ஒரு சிவகாசி போன்றோ, அல்லது, ஒரு சிறுத்தை போன்றோ செம ஜாலியான ஒரு இரண்டாம் பாதியை கொடுத்திருந்தால், விஜயின் பாக்ஸ் ஆபீஸ் சரித்திரத்தில் முக்கிய இடம் பிடித்திருக்கக் கூடிய ஒரு படம். இரண்டாம் பாதியில் ஏற்பட்ட சில குறைகளும், இயக்குனரின் அனுபவம் இன்மையும், படத்தை சற்றே பாதித்து விட்டது. 



செங்கோவி அண்ணணின் "மன்மதன் லீலைகள்"...

$
0
0
இந்த பதிவு பதிவர் செங்கோவி அண்ணின் "மன்மதன் லீலைகள்"மின்புத்தகத்தை பற்றியதே. ஆனால், அதற்க்கு போகும் முன் சில முன் கதைகள்....

கடந்த ஐந்து வருடங்களாக செய்து கொண்டிருந்த வேலையை, அதாவது இதுதான் நம்ம கேரியர், இதுலதான் நாம முன்னேறனும்ன்னு, இந்த துறைல நாம பெரிய ஆளா வரனும்னு மனக்கோட்டை  கட்டி செய்து கொண்டிருந்த இருந்த வேலையை  ரீசைன் பண்ணி ஒரு மாசம் ஆக போகுது. வேறு தொழில் எதுவும் இப்போதைக்கு இல்ல. மேலும், மேற்படிப்பில் விட்ட குறை தொட்ட குறைகள் கொஞ்சம் உள்ளன. கூடிய விரைவில் முடிக்கனும். வேலை தேடல் படலங்களும் போயிட்டு இருக்கு. முன்னாடி இருந்த வேலையை விட்டதுக்கு சரியாய் இதுதான் காரணம்ன்னு ஒன்னு சொல்ல முடியன்னாலும், கடந்த வருடத்தில் எனக்கு ஏற்பட்ட சில பல அனுபவங்கள் ஒரு காரணமா இருக்கலாம்! அதுல இருந்து என்னை கொஞ்சம் மாற்ற சில பல முயற்சிகள் மேற்கொண்டேன். இப்போ "ஐ ஆம் ஆல்ரய்ட்". ஆனாலுமே, இன்னுமே அந்த தண்ணி அடிச்சு, அடுத்த நாள் "ஹேங்ஓவர்ல"இருக்குற பீல் இருக்கு!

நேற்று, பல கிலோமீட்டர்ஸ் தொலைவில் ஒரு இண்டர்விவ். ஓரளவுக்கு சமாளிச்சு, அவர்கள் வைத்த எக்ஸாம்ஸ் எழுதிட்டு, "நல்லா எழுதுனோமா, இல்ல, மொக்கையா பண்ணிட்டோமா"ன்னு  ஒரு குழப்பமான மனநிலைலையில்,  இன்னைக்கு ரயிலில் சொந்த ஊர் நோக்கி  வந்துட்டு இருந்தேன். வெட்டியா சில மணி துளிகள், சரி பாட்டு கேட்போம்னு, ரேடியோ இயர்போனை போட்டேன், சிச்சுவேஷன் ஸாங்கா, நிமிர்ந்து நில் படத்துல இருந்து கானா பாலா "வாழ்கைங்குறது ஒரு வெறி புடிச்ச கழுத மச்சி, முன்னாடி போனா கடிக்குது, பின்னாடி போனா ஒதைக்குது"ன்னு சொல்லி கொண்டு இருந்தார். அப்புறம் ரேடியோ போர் அடிச்சி, எதையாவது வாசிப்போம்னு பிளாக்ஸ்ஸ நோண்டுனேன். ஜாக்கியின் "குறை ஒன்றும் இல்லை"பதிவும் , அப்புறம் இன்னொருவரின் அதற்க்கு எதிர் பதிவும் படிச்சு, இன்னும்  குழம்பினேன். சரி, எதாவது ஜெனரல் நியூஸ் படிப்போம்னு பார்த்தால், யுவனின் மத மாற்றமும் அதையொட்டி வெளியாகும் ஊகங்களும் இன்னும் குழப்பின. திரும்பவும் நானே "வாழ்கைங்குறது ஒரு வெறி புடிச்ச கழுத மச்சி, முன்னாடி போனா கடிக்குது, பின்னாடி போனா ஒதைக்குது"ன்னு சொல்லி கொண்டேன். 


அப்போ, நம்ம புட்டிபால் ஐமெஸ்ஸேஜ்ல எதையோ கேட்டாரு. அவருக்கு ரிப்ளை பண்ணிட்டு இருக்கும் போது பழைய 2011 "அது ஒரு பிளாகர் காலம்"ஞாபகம் வந்து தொலைச்சுச்சு. அசைபோட்டுட்டு இருக்கும்போது, அந்தகாலத்துல அவரு செம இன்டர்ரெஸ்ட்டிங்கா செங்கோவி அண்ணின் "மன்மதன் லீலைகள"தொடர்ச்சியா படிச்சிட்டு இருந்ததும், என்னையும் படிக்க சொல்லி ரெக்கமன்ட் பண்ணுனதும் ஞாபகம் வந்துச்சு. ஒவ்வொரு நாளும் படிச்சுட்டு சில விசயங்கள சிலாகிச்சு சொல்லுவாரு. உண்மையா சொல்லுறதுன்னா, அப்போ நான் அவற்றை கேட்டுக்கற மனநிலையில் இருக்கவே இல்லை. நம்ம நண்பன் புட்டிபால் சொல்லுராறேன்னு சில அத்தியாயங்கள வாசிப்பேன்(இது வரைக்கும் வாசிச்சது, இங்கொன்றும் அங்கொன்றுமாக, மேக்சிமம் அஞ்சு அத்தியாயங்கள்!). இன்னைக்கு ஏதாவது காமெடி இருக்கான்னு பார்த்து, அது சம்பந்தமாக கமென்ட் போட்டுட்டு வருவேன். செங்கோவி அண்ணனின் இந்த தொடரின் இறுதி நன்றி பதிவுகளில் கூட "இன்னும் படிக்க வில்லை நேரம் கிடைக்கும்போது பிறகு படிக்கிறேன்"னு கமென்டினதாக ஞாபகம்.

இன்னொரு விஷயம் என்னன்னா, எனக்கு எப்பவுமே தொடர்ச்சியான, நீட்சியான வாசிப்புகளில் ஆர்வம் இருந்ததே இல்லை. எனக்கு தெரிஞ்சு பள்ளிகூட நாட்களில் சுஜாதாவின் கடவுள் பூமி வந்த ஒரு நாவலை லைப்ரரியில் இருந்து எடுத்து ஆர்வகோளாறுல வாசிச்ச்சதே நான் முழுசா வாசிச்ச கடைசி தமிழ் நாவல்( அதுக்கு முன்னாடியும் பெருசா வாசிச்சது இல்ல!). பேசிக்கலி என் கேரக்டர் எப்புடின்னு நான் நினைச்சுட்டு இருந்தேன்னா "எதையுமே இப்பவே செஞ்சு இப்பவே முடிக்கனும்". அதுனால, ரொம்ப நீளமா இருக்குற எதையுமே நான் வாசிக்கிறது இல்லை. சின்ன வயசுகளில் அம்புலி மாமா, பாலமித்ரா, சிறுவர் சிறுகதைகள், அப்புறம் அடோலசன்ட்ல ஆனந்த விகடன், குமுதம், இன பிற சஞ்சிகைகள் பத்திரிகைகளில், முதலில் சினிமா நியூஸ் வாசிப்பேன். அப்புறம், திரும்பவும் ஒரு புரட்டு புரட்டி எனக்கு தெரிஞ்ச ஸ்போர்ட்ஸ், அப்புறம் வேற எதாவது சுவாரசிய, அரசியல், 18+ நியூஸ் வாசிப்பேன். மத்தபடி சீரியஸ் மேட்டர்ஸ்ன்னு நான் நினைக்கிற மேட்டர்ஸ்ஸ கண்டுக்கறதே இல்லை. இப்ப கூட பதிவுகளில் ரொம்ப சீரியஸ் மேட்டர்ஸ் வாசிக்கிறது இல்லை. 


நமக்கு கொஞ்சம் அதிகமா சுவாரசியமும், சட்டு புட்டுன்னு முடிச்சாலுமே போதும். செங்கோவி அண்ணனின் "நானா யோசிச்சேன்", அப்புறம் சில அவரது சிறு-அனுபவ பதிவுகள விடாம படிக்கிறதே அதுனாலதான். ஆனாலும், "மன்மதன் லீலைகள்"ஏதோ சீரியஸ் மேட்டர்ன்னு வாசிக்காமல் விட்டுட்டேன்.   ஆனால் இன்னைக்கு புட்டிபாலும், மன்மத லீலைகளும் ஞாபகம் வரவே, எப்புடியும் ஊர் போயி சேர இன்னும் ரெண்டு மணித்தியாலமாவது ஆகும், ஒகே, செங்கோவி அண்ணனின் சமீப ஈபுக் "மன்மதன் லீலைகள"வாசிப்போமோன்னு அவரது தளத்தினூடே டவுன்லோட் லிங்கில் போய், "ஈபப்"டவுன்லோடி, ஐபேடில் ஐபுக்ஸில் லோடிகொண்டேன்.....

பதிவு விளக்கம்:  தொடரை வாசிக்க தொடங்கியதில் இருந்தே, பல டிஸ்டர்பன்ஸ். அடசே, "இத முதல்லயே வாசிச்சி இருக்கலாம்" , "நல்லவேள முதல்லயே வாசிக்கல", "இப்போதான்டா இத வாசிகிறதுக்கு சரியான டயம்"ன்னு பல கலவை நிலைகள். சரியாக புத்தகத்தின் 23 வது அத்தியாயத்தை படித்துகொண்டு இருக்கும் போது, ஐபேடின் சார்ஜ் இறங்கிவிட்டது. இன்னும் முழுசா வாசிச்சு முடியல, ஆனா என்னோட "ஹேங்ஓவர் கொறைஞ்ச பீலிங்"அதுதான் அவசர அவசரமா வீடு வந்தவுடனே இப்பவே தட்டச்சிட்டேன். முழுசா வாசிச்சுட்டு, இன்னும் சொல்றேன்!


மாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]

$
0
0

ஒரு வாரமா எஸ்கேப் ஆகிட்டு இருந்த நான் போன வெள்ளிக்கிழமை நண்பர் ஒருவரின் வற்புறுத்தல் காரணமாக மாற்றான் படம் பார்க்கவேண்டிய துர்பாக்கிய நிலைமைக்கு ஆளானேன். நான் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம் என்னும் நல் எண்ணத்தில் கொஞ்சம் லேட்டா மாற்றான் பற்றிய எனது பார்வை இதோ உங்களுக்காக (சாவுடா...)

மாற்றான் படம் பற்றி ஒரு வரியில் சொல்லனும்னா.....

முதல் பாதி முற்று முழுதாக சூர்யா ரசிகர்களுக்கான விருந்து. இன்டர்வலுக்கு 10 நிமிடம் முதல் இருந்து இண்டர்வலுக்கு அப்புறம் வரும் 10 நிமிடங்கள் பேமிலி ஆடியன்சுக்காக. அதுக்கப்புறம் வருவது எல்லாம், இனிமேலும் இதுமாதிரியெல்லாம் படம் பார்க்க வருவீங்காளான்னு,  வந்த எல்லாருக்கும் சேர்த்து எலிக்கடி ட்ரீட்மென்ட். 

சூர்யா நல்லா நடிக்கறாரு, எந்த ரோல் குடுத்தாலும் நடிக்கரான்டான்னு தெரியாமா அசால்டா நடிக்கறாரு. ஒட்டிப்பிறந்த இரட்டையர்களாக பாடல் காட்சி, சண்டை காட்ச்சி அவுங்களுக்குள்ளேயே கட்டிப் புரண்டு சண்ட போடுறதுன்னு எதைக் குடுத்தாலும் கான்வின்சிங்கா பண்னறாரு, ஆனா அந்த ஒரே காரணுத்துக்காக அவர வச்சு இந்த இயக்குனர்கள் பண்ணற பரிசோதனையில செத்த எலி மாதிரி ஆகுறது அவரு மட்டுமில்ல, படம் பார்க்க போற நாமளும்தான்.





ஜெனெடிக் இன்ஜினியரிங், GM foods, விளையாட்டு வீரர்கள் ஊக்கமருந்து பாவிக்கறது, முடிக்கப்படாத விஞ்ஞான ஆராய்ச்சிகள பணம் சம்பாதிக்கரதுக்காக பாவிக்கறது, ரெட்டை சகோதரர்கள் போட்டி, பாசம் அது இது என ஒரு ஆயிரம் விசயத்த படத்துல சேர்த்து"என்னங்கடா உங்க கத?"ன்னு நம்மள மண்ணடைய பிச்சுக்க விட்டிருக்காரு இயக்குனர். எப்பவுமே இந்த "சராசரிகளுக்கான சராசரி சினிமாவுல" (உபயம் பிலாசபி) லாஜிக்கோ, விவாத கருவோ, கொள்கையோ பார்க்காத நமக்கு இந்த மசாலாவ எப்படி பரிமாறி இருக்காங்கன்னு பார்த்தா, கொஞ்சம் குழப்பம்தான் மிஞ்சுது. எது பிரதான கதைங்கற குழப்பம் நம்மள விட ஆனந்துக்கு அதிகமா இருந்திருக்கும்ன்னு தோணுது. ரெண்டாம் பாதி எனக்கு என்னமோ அயன் படத்த மறுபடியும் (ரீவைண்ட் காட்சிகள் இல்லாம) பார்குற பீலிங் தான். என்ன ஒரு வித்தியாசம் அது போர் அடிக்க முதல் முடிஞ்சிடுது, இது போர் அடிச்சு, போதை ஏறி, அப்புறம் அது தெளிஞ்சதுக்கப்புரமும் ஓடிக்கிட்டு இருக்கு. 

விசுவல் எபெக்ட், கிராபிக்ஸ் டிப்பார்ட்மென்ட் நல்லாவே வேலை செஞ்சி இருக்காங்க, ஒரு ரெண்டு காட்சிகள் தவிர ஒட்டு வேலைப்பாடு வெளியில தெரியல. (தசாவதாரம் க்ளைமாக்ஸ் சண்டை காட்சி எடுத்தவங்க கிட்ட கொஞ்சம் அட்வைஸ் கேட்டிருக்கலாம்). கஷ்டமான முதல் பாதி பாஸ் மார்க் வாங்குறதுக்கு முழுக்காரணமும் இந்த டீமும் சூர்யாவும்தான். ஹாரிஸ் ஜெயராஜ் கொஞ்சம் மெருகேறி இருக்காரு, வேகத்தடையா பாட்டுக்கள் இல்லை, பின்னணி இசை ஓகே. அந்த க்ளைமாக்ஸ் டங்கு டப்பா மியூசிக் தவிர. (அண்ணே ரஹ்மான் சிவாஜி படத்துக்கு அந்த இன்கம் டாக்ஸ் சீனுக்கு அந்த ம்யூசிக் போட்டாருன்னு நீங்க அயன்ல போட்டீங்க ஓகே, இன்னும் விடாம கண்டினியு பண்றீங்களே ஏன்?). மற்றும் படி ஹாரிஸ் படத்துக்கு ஒரு பிளஸ் தான். ஒளிப்பதிவாளர் திறமையானவர்தான், இரட்டையர் காட்சிகள், தீயே தீயே பாடல் இன்னும் பல கஷ்டமான இடங்களில் லைட் மாட்ச்சிங், கலர் மாட்சிங், இன்னும் இதர விதரங்கள் எல்லாம் பக்காவா இருக்கு, அவரால முடிந்த அளவு கேரி பண்ணி இருக்காரு, ஆனா பல இடங்களில் குருவி தலையில பனங்காய வச்சது தெளிவா தெரியுது. கஷ்டமான இடங்களில் ஸ்கோர் பண்ணறவரு லேசான இடங்களில், குறிப்பாக ஒத்த சூர்யா வரும் லாங் ஷாட்களில் (கால் முளைத்த பூவே பாடல்) கோட்டை விட்டிருக்கார். எல்லாமே அவுட் ஆப்  போகஸ். 


இயக்குனர் பல இடங்களில் ப்ரீ பிளானிங்ல அசத்தி இருக்காரு, நிறைய கஷ்டமான ஷாட் எல்லாம் யோசிச்சது மட்டுமில்லாம அத எப்படி திரையில கொண்டுவரலாம்ன்னு ரொம்பவே மெனக்கெட்டு இருக்காரு. அதுக்கு கண்டிப்பா பாராட்டுக்கள். ஆனா போஸ்ட் ப்ரோடக்ஷன்ல கோட்டை விட்டுட்டாரு. படம் ரப்பர் மாதிரி இழுவையா இருக்கறது கொஞ்சம் கூடவா உங்க கண்ணுக்கு படல சார்? (படம் திரைக்கு வரும் முன் ஒரு முழு படமா தேவையான காட்சி எது தேவையில்லாத காட்சி எதுன்னு பார்க்காம படம் ரிலீஸ் பண்ணி விமர்சனம் பார்த்துட்டு ட்ரிம் பண்றதுன்னா நீங்க எதுக்கு, எடிட்டர் ஒருத்தரே போதுமே). சூர்யா இல்லாம படத்துல வரும் காட்சிகளில் சச்சின் கடேக்கார் காட்சிகள் தவிர வேறு எதுவுமே கான்வின்சிங்கா இல்லை, எல்லாமே ரெண்டாம்பு பசங்க ஸ்டேஜ் டிராமா போட்ட கணக்கா செயற்கையா ஒட்டாம இருக்கு. இதனால்தான் சூர்யா நோ சொல்லியிருந்தா இந்த படத்த பண்ணி இருக்கமாட்டேன்னு சொன்னீங்களா? (நானும் எதோ இப்போ அதுதான் பாஷன், அதனாலதான் சொல்றீங்கன்னு நினைச்சேன்).

காஜல் அகர்வால், ரொம்ப குண்டாகி, வயசாகி ஆன்டி மாதிரி இருக்கா. டிரெஸ்ஸிங் சென்ஸ் கொஞ்சம் கூட சரி இல்ல, இன்னும் ஸ்டாண்டர்ட் எக்ஸ்பிரஷன்ஸ் எதையுமே மாத்தல. செம பிகரா இருக்கப்போ தெலுங்கு படமா நடிச்சிட்டு மொக்க ஆன்டியா ஆனதுக்கப்புறம் மட்டும் ஏந்தான் தமிழ் படம் நடிக்க வாராங்கன்னு தெரியல. (இந்த பொண்ணுக்காக நான் டார்லிங், பிருந்தாவனம், சாந்தமாமா, ஆர்யா 2 ன்னு பல தெலுங்குப்படம் பார்த்தேன்னு வெளியில சொன்னா என்ன கேவலமா பார்க்க மாட்டாங்களா?)

சூர்யா, எத்தன நாளைக்குத்தான் இவரு நல்லா நடிகாராருன்னு மட்டுமே சொல்லிக்கிட்டு இருக்கறது. அகிலன் கரெக்டர் செம, முன்பாதியில ரொம்ப கான்வின்சிங்கா அகிலன், விமலன்னு வித்தியாசம் காட்டின நீங்க ஏன் ரெண்டாவது பாதியில கோட்ட விட்டுட்டீங்க? அகிலன் மட்டும் உசிரோட இருந்தா படம் முழுக்க நீங்க அகிலன தானே கொன்டினியு பண்ணியிருக்கணும் அது ஏன் பாதியில விமலனா மாறி, அப்புறம் சூர்யாவா மாறிடுது? ஒரே ஆள்தான் மிச்சமிருக்கான் எப்படி பண்ணினாலும் ஒண்ணுதான்னு நினைச்சிட்டீங்களா? 

திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தி, படத்துல இருக்கற படு மொக்க காட்சிகள் இல்லாம பண்ணியிருந்தா ஒரு ஜாலியான சினிமா கெடச்சிருக்கும். படத்தோட மெயின் கதை என்னாதுங்குற குழப்பத்துனால பல நல்ல காட்சிகள் இருந்தும் வீரியம் இல்லாம இருக்கு. தேவையே இல்லாத பல மொக்க காட்சிகளுக்கு அதிக நேரம் செலவழிக்கப்பட்டு இருக்கு. அதெல்லாம் தவிர்த்து விட்டு பார்பதா இருந்தா படம் ஓகே. (ஒரு வேளை அந்த 23 நிமிஷம் ட்ரிம் பண்ணின புதிய படம் ஓகே வா இருக்கலாம்).
மற்றும் படி மொக்க படம் கெடயாது, சூப்பர் படமும் கெடயாது.

நம்ம ரேட்டிங்: 6/10.
டிஸ்கி:மெயின் ஸ்ட்ரீம் படங்கள்ல கதை என்கிற வஸ்துவ தேடுற கெட்ட பழக்கம் இல்லாததனால அத பத்தி எதுவும் பேச தேவையில்லைன்னு நினைக்கிறேன். படம் ரொம்ப நீளமா இருக்கறது எடிட்டர் தவறா, இயக்குனர் தவறான்னு தெரியல அதனால எடிட்டிங் பத்தியும் பேசல.


டிஸ்கி: கொடுத்த காசுக்கு படம் நஷ்டமில்ல. சூர்யா, டெக்னாலஜி, விசுவலைஷேஷனுக்காக ஒரு வாட்டி பார்க்க வேண்டிய படம், DVDல பார்க்குறது பெட்டர், போர்வார்ட் பட்டன் கைல இருக்கும்ல.



தொடர்புடைய பதிவுகள்

சூர்யா என்கிற சரவணன்: பிறந்தநாள் ஸ்பெஷல் பதிவு
ஏழாம் அறிவு - திரை விமர்சனம் (செமி போஸ் மார்டம்)
குள்ளப்பயலும் அவனது குள்ள நரித்தனமும்: ஒரு குட்டி கதை  
சூர்யாவின் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி: ஒரு பார்வை 

சின்மயியும் இணைய சுதந்திரமும்

$
0
0

கடந்த சில நாட்களாக வலைப்பூக்களில் எரியும் ஒரு பிரச்சினை இந்த சின்மாயி விவகாரம். இரு தரப்புக்கும் எதிராகவும், ஆதரவாகவும் பல பதிவர்களும், ஜாம்பவான்களும் பல பதிவுகள் இட்டாகிவிட்டது. இந்த பிரச்சினையின் அடிப்படை பற்றிய போதிய புரிந்துணர்வு என்னிடம் இல்லை. எனவே யார் சரி, யார் தவறு, அல்லது எது நியாயமானது போன்ற அதி புத்திசாலித்தனமான கருத்துக்களை நான் சொல்லப்போவதும் இல்லை. ஆயினும் நானும் ஒரு ப்ளாக்கர் என்கிற வகையில் எனக்கும் இது தொடர்பான சில கருத்துக்கள் இருக்கு, அது பற்றிய ஒரு பதிவே இது.

சின்மயி ஒரு சிறு பிள்ளைத் தனமான பிரபலம். சினிமா பிரபலம் என்கிற வகையில் இருப்பவர், பொது வெளியில் தனது குழந்தை தனமான கருத்துக்களை முன்வைக்கிறார். சிலர் அவற்றை கவனிக்காது விட்டு விடுகிறார்கள், சிலர் எதிர்வினை ஆற்றுகிறார்கள். அது அவரவர் எண்ணத்தை பொறுத்தது, அதில் குறை கூற நான் விரும்பவில்லை. சினிமாவுடன் தொடர்புடையவர்கள் சமூக, அரசியல் பிரச்சினைகளில், ஆழ்ந்த ஞானமோ, தெளிவான கருத்துக்களோ அல்லது போதுமான தெளிவோ கொண்டிருக்கவேண்டும் என எதிர்பார்ப்பது தவறானது அல்ல, ஆயினும் அவர்கள் அனைத்து விடயத்திலும் அக்கறை எடுக்கவேண்டும், கருத்து சொல்லவேண்டும் என எதிர்பார்ப்பது நியாயமானதும் அல்ல. பிரபலங்களை அவர்கள் துறை சார்ந்து மட்டுமே நோக்க வேண்டும், சின்மயி நல்லா பாடடுறாரா? நல்லா பின்னணி குரல் கொடுக்கறாரா அவ்வளவுதான், அதையும் தாண்டி சென்சிடிவ்வான விடயங்களில் அவரது பங்களிப்பு எவ்வாறு இருக்கறது, நாங்க ட்விட்டரில் ஒரு போராட்டம் நடத்துறோம் ஆதரவு தா எனக் கேட்பது பொருத்தமானதல்ல.


தவறான கருத்தாயினும் தனது சுய கருத்தினை முன்வைக்கும் சுதந்திரம் ஒருவருக்கு இருக்கிறது. ப்ளாக்கர், ட்விட்டர், பேஸ்புக் இன்னும் இதர விதர சமூக வலைத் தளங்கள் நமக்கு அளித்திருக்கும் பெரும் கொடை அது. அதே நேரம், தனக்கு போதிய அறிவு இல்லாத விடயத்தில் கருத்து தெரிவிக்காது இருக்க வேண்டிய பொறுப்பும் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது, இல்லை அக்கருத்துக்களை குறைந்த பட்ச நாகரீகத்தோடு முன்வைக்க வேண்டிய பொறுப்பு அவருக்கு இருக்கிறது. சென்சிடிவ்வான விடயங்களில் கருத்துச் சொல்லும் போது வரக்கூடிய எதிர்வினைகளை கையாளும் மனோ பக்குவமும், கருத்து மோதல்கள் எழும்போது நாகரீகத்தை கடைப்பிடிக்கும் அடிப்படை அறிவும் அவசியமாகிறது. இவை இல்லாத விடத்து கருத்துக்களை தவிர்த்துக் கொள்வது கடமையும் ஆகிறது. உனது கருத்து தவறானது, அதை முன்வைக்கும் உரிமை உனக்கு இல்லை என நாம் வாதாட போனால் அது ஒரு வகை பாசிசமே. தவறான கருத்துக்கள் முன்வைக்கப் படாத விடத்து, அவற்றை திருத்திக் கொள்வதற்கான வாய்ப்பும் மறுக்கப் படுகிறது. பரந்து பட்ட இந்த இணையவெளியின் அவசியமும் அற்றுப் போகிறது. அந்த அடிப்படையில் யார் வேணுமானாலும், (சில விதி விலக்குகள் தவிர) என்ன வேணுமானாலும் பேசலாம், அதுதான் கருத்துச் சுதந்திரம்.

ஆனால் எப்படி வேணும்னாலும் பேசலாம் என்பது கருத்துச் சுதந்திரம் கிடையாது. அது ரவுடியிசம், அல்லது தாதாயிசம். இதுவே இன்று தமிழ் சமூக வலைத்தளங்களில் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு சென்சிடிவ் விடயம் அல்லது ஒரு சமூகம் தொடர்பான கருத்தினை முன்வைக்கும்போது எப்படி முன்வைக்கவேண்டும் என்கிற அடிப்படையை சின்மயி காணத்தவறி விட்டார். அதை எதிர்க்கும் போது அதை எவ்வாறு எதிர்க்கவேண்டும் என்கிற அடிப்படையை எதிர்பவர்களும் காணத் தவறி விட்டார்கள். இருவரும் செய்தது மிகப்பெரிய தவறு. பொது வெளியில் ஒருவர் ஒரு கருத்தினை முன்வைக்கும்போது, ஒருவர் எதிர்வினை ஆற்றுகிறார் என வைத்துக் கொள்ளுங்கள், இப்போது முதல் கருத்துப் பரிமாறியவர் எதிர்வினையாளரின் பக்க நியாங்களை உணர்ந்து தனது கருத்தினை திருத்திக் கொள்ளும்போது, அல்லது எதிர்வினையாளருக்கு தன் பங்கு நியாங்களை எடுத்துரைக்கும் போது, அது கருத்து பரிமாற்றமாக அமைகிறது. 




அதே நேரம் ஒருவரது ஈகோ, ஆணவம், அகந்தை, மாற்றுக் கருத்துக்களுக்கு அனுமதியாளிக்காத தன்மை போன்ற தனிப்பட்ட இயல்புகள் தலை தூக்குமிடத்து அது கருத்து மோதலாக மாறுகிறது. இரு சாராரும் இவ்வகையான தனிப்பட்ட இயல்புகளை கொண்டிருக்கும் இடத்து அந்த கருத்து மோதலானது தீவிரம் அடைந்து வசை பாடல்களாகவும், யாருக்கு அதிகம் கெட்ட வார்த்தை தெரியும் என்பதை பொது வெளியில் பரீட்ச்சித்துப் பார்க்கும் குழந்தை சண்டையாகவும் மாறி விடுகிறது. இதில் ஒருவர் பிரபலமாக இருந்துவிட்டால், பொது வெளியில் கெட்ட வார்த்தை பேசிக்கொள்வதர்க்குப் பதில் அடுத்தவர் சார்ந்த சமூகத்தை அல்லது பிற விடயங்களில் அடுத்தவர் கொண்டிருக்கும் கருத்துக்களை தாக்க ஆரம்பிக்கிறார், பிரபலம் இல்லாதவர்களாயின் அடுத்தவர் குடும்பம், பிறப்புறுப்பு முதல் அனைத்தையும் வசை பாட ஆரம்பிக்கிறார். இதுவே சின்மயி, விவகாரத்தில் நடந்தது, சமீப காலமாக இணையத்தில் நடந்து வருவது. 

இங்கு ஏனைய, அரசியல், சமூக, சமய காரணிகள் சேருமிடத்து, அது குளுப்பிரச்சினயாகி, பின்னர் பொதுப்பிரச்சினயாக உருமாறி, சந்திக்கு வந்துவிடுகிறது. சம்பந்தப்பட்டவர்களின், அரசியல் பின்னணி போன்ற காரணிகள் இவ்வாறான பிரச்சினைகள் எவ்வாறு தீர்க்கப் படுகிறது என்பதில் செல்வாக்கு செலுத்துகிறது. அடிப்படையான கருத்தோ, கருத்து பரிமாற்றமோ முழுதாக மறைந்து பிரச்சினை வேறு பரிமாணத்தை பெறுகிறது. ஒவ்வொருவரும் சுய லாபம் தேடும் நோக்கில் பிரச்சினையை திரிப்பதும், நடக்கிறது. இவ்வாறான ஒரு சுதந்திரமே நாம் இன்று கருத்துச் சுதந்திரம் என்னும் போர்வையில் கொண்டிருப்பதும், காப்பாற்ற போராடுவதும். உண்மையில் கருத்துச் சுதந்திரம் என்பது நமக்கு கிடைத்த ஒரு வரப் பிரசாதம். அதை பேணிப் பாதுகாப்பது நாம் ஒவ்வொருவர் மீதும் உள்ள கடமை. பொது வெளியில் நாம் நமது சுதந்திரத்தை எவ்வாறு பயன் படுத்துகிறோம் என்பதே நாம் இன்னும் எவ்வளவு நாளைக்கு இந்த சுதந்திரத்தை அனுபவிக்கப் போகிறோம் என்பதை தீர்மானிக்கும். 



பின் குறிப்பு: 
இது கருத்துப் போராக மட்டுமே இருக்குமானால் ராஜனை ஆதரிக்க தோன்றிய போதிலும், அவரது ட்வீட்டுக்களின் ஸ்க்ரீன்சாட்டுகள் என சொல்லப்படுனவற்றை படிக்கும் போது அவருக்கு ஆதரவளிக்க மனம் மறுக்கிறது. அதற்காக இந்த விடயத்தில் அவர் மேல் மட்டுமே தவறு இருப்பதாக அர்த்தம் அல்ல, தனது பிரபல்யத்தை துஷ்பிரயோகம் செய்ததது மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த தமிழர்கள் மனதும் புண்படும்படியான குழந்தை தனமான கருத்துக்களை பொது வெளியில் பரப்பியது சின்மயி செய்த மிகப்பெரிய தவறு. அதிகார பலம் காரணமாக பிரச்சினையின் மையத்தையே திசை திருப்பப்பார்பதும் பெரும் தவறு. 

மேலும் படிக்க: 
சின்மயி கைது செய்யப்படுவாரா? - செங்கோவி 
ராஜனின் கைது ; கற்பிக்கப்படும் இணைய சுதந்திரம்? -ஜீ
ட்விட்டர்ஸ் கைது (ராஜன் லீக்ஸ்) - சொல்லும் பாடம் என்ன ? - ராஜ்

இந்திய சினிமாவின் நடன ஜாம்பவான்கள் : வீடியோ பதிவு/பகிர்வு

$
0
0
ஆடலும் பாடலும் இந்திய சினிமாவின் ரத்தத்தில் ஊறிப்போன ஒன்று. நாட்டிய பேரொளியில் தொடங்கி சாந்தனு, அதர்வா வரையில் நம்மை நடனத்தால் கட்டிப்போட்டவர்கள் பலர். கமல் ஹாசன், சிம்ரன், மாதுரி தீக்ஷித், கோவிந்தா, பிரபுதேவா, லாரன்ஸ் போன்ற பல காலத்தால் அழியாத நடனக் கலைஞர்களை கண்டது இந்த இந்திய சினிமா. இன்றைய காலகட்டத்தில் சிறந்த சினிமா நடனக் கலைஞர் யார் என்பது பல இடங்களில் ஒரு போட்டியாகவே நடந்து கொண்டிருக்கிறது. என்னை கவர்ந்த சிலரது நடனங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 

இளைய தளபதி:

ஷஹீத் கபூர்: 


ஹ்ரித்திக் ரோஷன்:


அல்லு அர்ஜுன்:


ஜூனியர் NTR:

ஸ்ரேயா சரண்:


லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்:




டிஸ்கி 1:சிம்பு, தனுஷ், பரத், ஜெயம் ரவி, வினீத், ரஹ்மான், பிரசாந்த், அர்ஜுன்,  நிதின், ராம், அனுஷ்கா ஷர்மா (இந்தி), இலியானா இன்னும் பல பேர் பட்டியலில் விடுபட்டிருக்கலாம். எல்லாரோட வீடியோவும் போட்டா அப்புறம் யூடியூப் எதுக்கு இருக்கு?

டிஸ்கி 2:  நெஞ்சுக்குள்ள ஒம்ம முடிஞ்சிருக்கேன்ரஹ்மான் பின்றாருப்பா....


விஷ் யூ ஆல் ஹாப்பி தீபாவளி!!

துப்பாக்கி, ஜப் தக் ஹேய் ஜான் : இரட்டை பார்வை

$
0
0
பதிவர்னா ஒரு படம், அது தமிழோ, இந்தியோ, தெலுங்கோ, இங்கிலீஷோ இல்ல கொரியன், இந்தோநேஷியனோ, உடனே பார்த்து விமர்சனம் எழுதனும்கறது ஒரு சட்டம், அத மீறி படம் பார்த்துட்டும் விமர்சனம் எழுதலயின்னா சங்கத்துல இருந்து தள்ளி வச்சிடுவாங்கன்னு மொக்கராசு மாமா மிரட்டுனதால, இந்த தீபாவளி ரிலீஸ்ல நான் பார்த்த ரெண்டு படத்துக்கும் ஒரே பதிவுல விமர்சனம் எழுதி சங்க மெம்பர்ஷிப்ப காப்பாத்திக்கலாம்ன்னு இறங்கிட்டேன்.

முதல்ல ஷார்ட்டா துப்பாக்கி. துப்பாக்கிய பத்தி பலபேர் பல பதிவு போட்டு பல விமர்சனம் போட்டு படம் மெகா ஹிட்டுன்னு ஊரறிய அறிவிப்பும் குடுத்தாச்சு. இதுக்கு மேல இந்த படத்த பத்தி நான் என்ன சொல்றது? ரொம்ப நாளைக்கு அப்புறமா முழு திருப்தியோட ஒரு விஜய் படம் பார்த்தது இந்த தீபாவளிக்குத்தான். அண்ணன் பின்றாரு, நடிப்புல செம முதிர்ச்சி தெரியுது, ஆனா தோற்றதுல செம இளமை தெரியுது. முருகதாஸ் மொத்தமா நாலே நாலு சீன யோசிச்சிட்டு, அத விஜயோட உதவியால ஒரு முழுப்படமா குடுத்திருக்காரு, வழக்கம் போல ஹரிஷ் ஜெயராஜ் செமையா சொதப்பியிருக்காரு. படத்துல வில்லன காட்டறப்போ அந்த ஊ ஊ ஊ  BGM பழைய விஜயகாந்த் பட "பயங்கர வில்லன"ஞாபகப்படுத்தி தொலைக்குது. நாலு சீன விட்டா படத்துல சொல்லிக்கொள்ளும்படியா எதுவுமே இல்ல, ஆனா விஜய் நம்மள சீட்டோட கட்டிப் போட்டு வைக்கிறதால, படம் முடிஞ்சு வெளிய வாரப்போ, ஒரு முழுத் திருப்தி கெடைக்குது, நீண்ட நாளைக்கு அப்புறமா ஒரு செம மாஸ் என்டேர்டைனர் பார்த்த மாதிரி நமக்கு ஒரு பீலிங் வருது. துப்பாக்கி, இட்ஸ் ஆல் அபவுட் விஜய். கிங் ஆப் மாஸ்.


ஜப் தக்  ஹேய் ஜான்:


எட்டு வருஷங்களுக்கு பிறகு யாஷ் சோப்ரா படம் இயக்க வர்றாருன்னு சொன்னதுமே இந்த படத்துக்கான எதிர்பார்ப்பு தொத்திக்கிருச்சி.  "எ யாஷ் சோப்ரா ரொமான்ஸ்"எப்படி இருக்கும்ன்னு தெரிஞ்சவங்களுக்கு படத்தோட கதைய பத்தி எதுவுமே சொல்ல தேவையில்ல, கதைய விட பெர்போர்மான்ஸ் தான் எப்பவுமே அவரோட படத்துல USP.  வழக்கமான யாஷ் சோப்ரா ரொமான்ஸ் தான் படம். ஆனா ரொம்ப நாளைக்கு அப்புறமா பார்க்குறதால ரொம்ப ரீஃப்ரெஷிங்கா இருக்கு படம்.  ஷாருக்க  விட்டா ரொமாண்டிக் பிலிம்ல பெர்ஃபோம் பண்ணறதுக்கு வேற யார தேடுறது? ரொம்ப நாளைக்கு அப்புறமா ஷாரூக் ரொமாண்டிக் ஹீரோவா நடிக்கற படம்,  ரஹ்மான் சார் மியூசிக், முதல் முறையா ஷாரூக்கும் கத்ரீனா கய்ப்பும் ஜோடி சேரும் படம், ஆதித்யா சோப்ரா கதை வசனம்ன்னு சொன்னதுமே எதிர்பார்ப்பு பல மடங்காயிருச்சி. படம் முடிஞ்சு ஃபைனல் பிரிண்ட் வர்ரதுக்கு முன்னாடியே யாஷ்ஜீ திடீரென இறக்க, யாஷ் சோப்ராவோட கடைசி படம்ங்குற டைட்டில் வேற சேர்ந்துடுச்சு. இங்க படம் ரிலீஸ் முதல் நாள் முதல் ஷோவுக்கு முதல் ஆளா போய் நின்னுட்டேன். இனிமே படம் எப்பிடின்னு பார்க்கலாம்.

காதலை பிரிஞ்சு வாழ்றதும், தினம் தினம் செத்து பொழைக்கறதும் ஒண்ணுதான். நம்ம காதலிக்கறவங்க நல்லா இருக்கனும்கறதுக்காக பிரிஞ்சு வாழறதுக்கு பதிலா பேசாமா பினாயில வாயில ஊத்தி கொன்னுடலாம். இவ்வளவுதான் படத்தோட கதை. இந்த கதையை வச்சிக்கிட்டு ஆதித்யா சோப்ரா எழுதியிருக்கற திரைக்கதை முன் பாதி அற்புதம், "கடவுளுக்கு சத்தியம் பண்ணி பிரியற ஒரு காதல்"ன்னு ஒரு சின்ன லைன வச்சி ரொம்ப கன்வின்சிங்கா ஒரு திரைக்கதை எழுதியிருக்காரு, ரெண்டாவது பாதி, தொண்ணூறுகளின் மனம் சார்ந்த காதலுக்கும், ரெண்டாயிரங்களின் உடல் சார்ந்த காதலுக்கும் இடையிலான வித்தியாசம், முக்கோண காதல், காதல் தோல்வி, பெர்போர்மான்ஸ் ஸ்கோப்ன்னு ஏகப்பட்ட விஷயங்கள் இருந்தும் அம்னீசியா, நினைவு திரும்பி வரவழைக்கும் நாடகம்ன்னு 1980 சமாச்சாரத்த தொட்டு திரைக்கதை அமைச்சது படத்தோட நாம ஒன்றிப்போறத கொஞ்சம் கஷ்டமானதா ஆக்கிடுது. தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே, வீர்-சாரா, ரப் னே பனாதி ஜோடி, போன்ற படங்களை எழுதிய ஆதித்யா சோப்ரா இந்த அதர பழைய நாடகத்த தொட்டது கொஞ்சம் வருத்தம் தான், ஆனாலும் பெர்போர்மன்சும், யாஷ் சோப்ராவின் இயக்கமும், ஆதித்யா சோப்ராவின் வசனங்களும் பெருமளவு அதை ஈடு செஞ்சுடுது.


ஷாரூக் கான் ரொம்ப இளமையா இருக்காரு, ஒரு பணக்கார பொண்ணு தினக்கூலிய லவ் பண்ணுவாளான்னு யாருக்காவது டவுட்டு வந்தா அந்த தினக்கூலி இந்தாளு மாதிரி இருந்தா பணக்கார பொண்ணு என்ன தேவலோக ராணியா இருந்தாலும் லவ் பண்ணுவான்னு சொல்ற அளவுக்கு, அவருதான் தி கிங் அப் ரொமான்ஸ்ன்னு மறுபடியும் நிரூபிச்சிருக்காரு. ஆர்மி ஆபிசர் சமர் ஆனந்தா இருக்கட்டும், லண்டன்ல பஞ்சாபி பாட்டு பாடி ஆடுற தெருப்பாட்டு கலைஞரா இருக்கட்டும், ஹோட்டல்ல கொச்சை இங்கிலீஷ்ல பேசி சிரிக்க வைக்கற வெயிட்டரா இருக்கட்டும், குறிப்பா அனுஷ்கா ஷர்மா பந்தயம் கட்டிட்டு ஆத்துல எறங்கி குளிர்ல நடுங்கரப்போ காப்பாத்துற காட்சியிலா இருக்கட்டும், ஷாருக் கான் King Khan தான். ரொம்ப ஜாலியான ஒரு முகம், ரொம்ப இறுக்கமான போரிங்கான ஒரு முகம், ரெண்டயுமே செமயா வெளிப்படுத்தியிருக்காரூ, (ரப் னே பனாதி ஜோடி படத்துல ரெண்டு பாத்திரமும் ரெண்டு எக்ஸ்ட்ரீமா இருக்கும், அதையே சூப்பரா பண்ணியிருப்பாரு, இதுல ரெண்டும் ரொம்ப சட்டிலா இருக்கும், இத ரொம்பவே அற்புதமா தூள் பண்ணியிருக்காரு)

கத்ரீனா கைப், முதல் முறையா முழு நீள ரொமாண்டிக் படத்துல நடிச்சிருக்காங்க, லண்டன்ல வாழ்ற, தம் அடிக்கற, எனக்கு இந்திய மாப்ள வேணாம், அவங்க எல்லாம் கருப்பா இருக்காங்கன்னு ஜீஸஸ் கிட்ட வேண்டிக்கற, ஆனா அதே நேரம் இந்திய பண்பாடு விட்டுப்போகாத பொண்ணா கன கச்சிதமா பொருந்தி இருக்காங்க, இது வரைக்கும் ஒரு கிளாமர் டோலா மட்டுமே படத்துல வந்திட்டு போனவங்க, முதல் முறையா தன்னாலும் நடிக்க முடியும்ன்னு காட்டி இருக்காங்க, அந்த வகையில சுப்பர்.

ராப் னே பனாதி ஜோடி படத்துல பார்த்த அனுஷ்காவுக்கும்,  இதுக்கும் நூறு வீத வித்தியாசம். அந்த பாத்திரத்துக்கு அப்படியே நேர் எதிரா, மேக் அப் - பிரேக் அப் கலாசார இன்ஸ்டன்ட் காதல் உலகத்துல வாழுற, அடிக்கடி இங்கிலீசுல கெட்ட வார்த்த பேசிக்கற நவ நாகரிக பொண்ணா ரொம்ப கான்வின்சிங்கா இருக்காங்க. ப்ரீதி-ராணி, கரீனா-பிரியங்கா வுக்கு அப்புறமா தீபிகா-அனுஷ்கா தான் அடுத்த பாலிவுட் கிளாமர் கம் அக்டிங் ஹீரோயின்ஸ் ஜோடின்னு அடிச்சு சொல்றாங்க.

ரஹ்மான் சாரோட பின்னணி இசை ஒரு ரொமாண்டிக் படத்துக்கு உரிய விதத்துல இருக்கு. திரையில தெரியற காட்சி கண்ணுல தெரியுதா, காதுல தெரியுதான்னு புரியாத அளவுக்கு பின்னணி இசையும் ஒளிப்பதிவும் போட்டி போட்டுக்கிட்டு இருக்கு படம் முழுவதும். பாடல்கள் கேட்டதும் பிடிக்கும் ரகம் கெடயாது. ஆனா படம் பார்த்ததுக்கு அப்புறம் இருந்து இந்த ஒரு வாரமா ஜப் தக் ஹேய் ஜான் பாடல்கள்தான் கேட்டுக்கிட்டே இருக்கேன். சல்லா, சான்ஸ், ஹீரு, இஷ்க் சாவா, ஜியாரே எல்லாமே அற்புதம்.

இயக்குனர் யாஷ் சோப்ரா, தனக்கே உரிய பாணியில, ஒரு காதல் கதைய, ஆனா இன்றைய இளைஞர்களையும் கவரும் வகையில இயக்கி இருப்பது, அதுவும் தனது என்பதாவது வயசுல இவ்வளவு இளமையா ஒரு படத்த இயக்கியிருப்பது வியந்து பார்க்க வைக்குது. சமீபத்திய இந்தி படங்கள் எல்லாமே கொஞ்சம் மேற்கத்தைய கலாசாரத்தையும், முறை தவறிய காதல்களையும் மையப்படுத்தி வரும்போது, 90 களின் அதே பழைய காதல் கதையா கொஞ்சமும் சுவாரஷ்யம் குறையாமல் கொடுத்திருப்பது யாஷ் சோப்ராவின் அனுபவத்தை சொல்கிறது. இனிமேல் "எ யாஷ் சோப்ரா ரொமான்ஸ்"பார்க்க முடியாமல் போகுமே என்கிற ஏக்கம் எழுவதை ஏனோ தவிர்க்க முடியவில்லை.

ஜப் தக் ஹேய் ஜான் - A Yash Chopra Romance Dressed in Modern Outfits.

டிஸ்கி: என்னங்க இது? பதிவ எழுதி பப்ளிஷ் பண்ண பிறகு , திடீர் திடீர்ன்னு காணமா போகுது? "An error occurred while trying to save or publish your post. Please try again. Ignore warning"  ன்னு வருதே? 

உங்களுக்கெல்லாம் நட்புன்னா என்னன்னு தெரியுமா?

$
0
0
உங்களுக்கெல்லாம் நட்புன்னா என்னன்னு தெரியுமா? நண்பன்னா என்னன்னு தெரியுமா? மொக்கராசு மாமான்னா என்னன்னு தெரியுமா? கடமைன்னா என்னன்னு தெரியுமா? இதோ இப்போ தெரிஞ்சுக்கங்க.

உங்களுக்கெல்லாம் நம்ம சந்தானம் பான்ஸ் ப்ளாகும் அதுல ரெண்டுபேர் ப்ளாகுறதும் மட்டும் தெரிஞ்சிருக்கும், இதுக்கு பின்னால முன்னால எத்தன ரகசியங்கள், கொள்கைகள் இருக்குன்னு தெரியுமா? எவ்வளவு அழகான ஒரு நட்பு இருக்குன்னு தெரியுமா? அதையெல்லாம் விளக்கவே இந்த பதிவு.

எனக்கு ரெண்டு வயசு இருக்கும் போது....
உங்க கற்பனைய கொஞ்சம் நிறுத்துங்க. அப்பல்லாம் எனக்கு ஒன்னுக்கு வருதுன்னு சொல்லவே தெரியாது, மொக்க ராசு மாமாவ எப்படி தெரியப்போகுது. நாங்க சந்திச்சிக்கிட்டது பத்தாம்பு படிக்கறப்போதான், அதுக்காக பள்ளி சிநேகிதம்ன்னு நெனச்சிக்காதீங்க, எப்பவுமே எட்டு மணிக்கு பள்ளி ஆரம்பிக்கும்னா நான் எட்டர மணிக்குத்தான் பஸ்ல ஏறுவேன், அதே பஸ் எட்டே முக்கா மணிக்கு நம்ம மொக்க ராசு மாமா ஸ்டாப்புக்கு வரும், தவறாம அவரும் அந்த பஸ்ல ஏறிக்குவாறு. இப்படி ஆரம்பிச்சதுதான் எங்க சிநேகிதம்.
அவரு பள்ளியும் எங்க பள்ளியும் பரம எதிரிக, அவரு தல ரசிகன், நான் தளபதி ரசிகன், அவரு சூப்பர் ஸ்டார், நான் உலக நாயகன். அவரு சிம்பு, நான் தனுஷ். அவுரு கேபிள் சினிமா, நான் பிலாசபி சினிமா. அவுரு சல்மான், நான் ஷாரூக். சினிமாவுல தொடங்கி வாழ்கையில எல்லாத்துலயுமே நானும் ராசு மாமாவும் எதிரும் புதிரும்தான். அவரு கூட எப்பவுமே ஒரு கூட்டம் இருக்கும், அது அவரா கஷ்டப்பட்டு சேர்த்த கூட்டம், என் கூடவும் ஒரு கூட்டம் இருக்கும், அது தானா சேர்ந்த கூட்டம். ரெண்டுமே வேற வேற கூட்டம். நாங்க ரெண்டுபேரும் போன யூனிவர்சிட்டி வேணும்னா ஒண்ணா இருக்கலாம், ஆனா அவுரு வேற படிப்பு நான் வேற படிப்பு. அவுரு விண்டோஸ், நான் மேக். அவுரு சாம்சுங் ஆன்ட்ராய்ட் நான் ஆப்பில் ஐ.ஓஎஸ். தலைவரு சந்தானம் தவிர எனக்கும் ராசு மாமாவுக்கும் எந்த விஷயத்துலயும் ஒத்துப்போறதே கெடயாது. இப்படி ரெண்டுபேர் ஒண்ணா சேர்ந்து ஒரு ப்ளாக் நடத்துறோம்னா அது எப்படி சாத்தியமாச்சி? இதுக்கெல்லாம் என்ன காரணம்னா எங்க ரெண்டுபேர் நட்பும் இந்த வேற்றுமைகள் எல்லாம் தாண்டிய புனிதமான நடப்பு. 
இங்கதான் நம்ம கதையில ஒரு ட்விஸ்ட்டு. இந்த புனிதமான நட்பு, மூழ்காத ஷிப்பு  ப்ளா ப்ளா ப்ளா... இதெல்லாம் லாரிக்கு பின்னாடி வேணும்னா எழுதலாம், ஆனா லைப்க்கு செட் ஆகாது. நான் என்ன பண்ணினாலும் ராசு மாமா என்ன தாறு மாறா கலாய்ப்பாரு, அதே மாதிரி நானும். இப்படியே எங்க வண்டி ஓடிக்கிட்டு இருந்திச்சு, ஒரு நாள் நாடு ராத்திரி, நான் கழிவறையில் ஒக்காந்திருந்தப்போ கணப்பொழுதில் ஒரு யோசனை உதிச்சது. அதுதான் எத்தன நாளைக்குத்தான் நாமளும் நம்மளையே மாறி மாறி கலாய்ச்சுக்கிட்டிருக்கறது, நாம ஏன் நம்ம வட்டத்துல இருந்து வெளிய வந்து இந்த உலகத்துல இருக்கற ஒருத்தனையும் விடாம கலாய்க்கக்கூடது? இத நான் ராசு மாமாக்கிட்ட சொன்னதும் அவரும் செம குஷி ஆயிட்டாரு, நாம நாளைக்கே ஒரு ப்ளாக் ஆரம்பிக்கறோம், ஆரம்பிச்சு "எவனா இருந்தாலும் கலாய்ப்போம்"ன்னு சொல்லிட்டாரு, அப்புடி ஆரம்பிச்சதுதான் எங்க ப்ளாக்கர் பயணம். அப்புறம் தலைவர் சந்தானம் மேல உள்ள அதீத பிரியத்தினால அவருக்காக ஒரு டிவிட்டர் ஃபேன்ஸ்அக்கவுண்ட் ஓபன் பண்ணோம், அது சக்சஸ் ஆகுனாப்புறம் அதன் தொடர்ச்சியா ஒரு சந்தானம் பிளாக் உருவாக்கனும்ன்னு சொல்லி அந்த பழைய ப்ளாக்க(!) மூடிட்டு ஆரம்பிச்சதுதான் நீங்க இப்போ படிச்சிக்கிட்டு இருக்கற இந்த "அகாதுகா அப்பாடக்கர்ஸ், ரியல் சந்தானம் ஃபேன்ஸ்"ப்ளாக்.

அதுசரி நட்பு, நண்பன், மொக்கராசு மாமா எல்லாம் சொல்லியாச்சு, கடமைன்னு எதோ சொன்னியே அது எங்கன்னு தேடறீங்களா? அதாவது, நம்ம ராசு மாமா ரொம்ப நாளா டாக்டர் ஆகணும்ன்னு படிச்சிக்கிட்டு இருக்காரு. ப்ளாக்கர் ட்விட்டர்ன்னு வெட்டியா சுத்திக்கிட்டு இருக்கறதால அந்த வேல ரொம்ப நாளா இழுத்துக்கிட்டு கெடக்கு. இப்போ என்னன்னா சீகிரமாவே படிப்ப முடிச்சுடனும்ன்னு விடா பிடியா இருக்கார். முதல் வேலையா ப்ளாக்கர் அக்கவுன்ட் டெம்பரரி டீஆக்ட்டிவேட் பண்ணிட்டார். இதுனால உங்க எல்லாருக்கும் தெரியப்படுத்துவது யாதெனில் இன்னும் கொஞ்ச நாளைக்கு  மொக்கராசு தொல்ல இந்த ப்ளாக்கருக்கு இல்ல. அதுனால, அவரு திரும்ப வர்ற வரைக்கும், நானு மட்டும் (சில பல ஆணி புடுங்கல்கள் எனக்கும் இருந்தாலும்) தனியாளா பதிவுலகத்துல நடமாடலாம்ன்னு இருக்கேன். இதெல்லாம் என்ன பெருமையா, இல்ல...., உன்னதமான நட்புக்கு செய்யுற கடமை!!

டிஸ்கி 1:இம்புட்டு நேரமா பொறுமையா ஒக்காந்து இந்த பதிவ படிச்ச உங்களுக்கு நம்ம மனமார்ந்த நன்றிகள். பதிவு எழுதி ரொம்ப நாளாச்சா, சங்கம் நம்மள மறந்துட கூடாதுன்னதான் சின்னதா ஒரு சுய பதிவு. வழமையா, இது மாதிரி பதிவு எல்லாம் நூறாவது பதிவு மாதிரி எதாவது ஸ்பெஷல் பதிவாதான் போடுவாங்க, ஆனா நாங்க போற ஸ்பீட்க்கு நூறாவது பதிவு எல்லாம்?? அட போங்க சார்!! 

டிஸ்கி 2:எவ்வளவு உயரத்துக்கு போனாலும், நட்புக்கு மரியாத செஞ்சு, நட்பு மாறாமா இருக்குற சூப்பர் ஸ்டாருக்கு இந்த பதிவு சமர்ப்பணம். எங்க ரெண்டு பேர் சார்புலையும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்லிக்கறோம்.

2012 டாப் 10: தமிழ் காமெடி படங்கள்

$
0
0
வருஷம் பூரா பதிவு போடுறோமோ இல்லையோ, ஆனா  வருஷ கடைசில "டாப் 10"கள் போட வேண்டியது ஒரு பதிவரோட முக்கிய கடமைகளில் ஒன்னு. இந்த பிளாக்ல ஒன்னுக்கு ரெண்டாவே பதிவர்கள் இருக்கோம், அப்புறம் இது கூட போடலான்னா வருங்காலத்துல நம்ம பழைய போஸ்ட்ஸ தேடி படிக்க போற(!)  சின்னஞ்சிறுசுக நம்மள பத்தி எவ்வளவு கேவலமா  நினைக்குங்க. ஆனா வெளிவர்ற எல்லா படத்தையும் பார்க்குற மக்கு பசங்க இல்ல நாங்க, கொஞ்சமாவது படத்துல என்டர்டேய்ன்மென்ட் இருக்குன்னு தெரிஞ்சா மட்டும்தான் அந்த படத்த கொஞ்சம் லேட்டானாலும் பார்போம். என்டர்டேய்ன்மென்ட்ங்குற கேட்டகரில மாஸ், ஆக்ஷன், யாரு ஹீரோ, யாரு ஹீரோயின் ப்லா ப்லான்னு நிறைய இருந்தாலும் எப்பவுமே காமெடிக்குதான் முதலிடம்.

எதுக்காக இவ்வளவு மொக்க போடுற? மேட்டர சீக்கிரமா சொல்லுங்குறீங்களா!!! ஓகே பாஸ். 2012ல வந்த படங்கள்ல, நாங்க பார்த்த படங்கள்ல காமெடி நல்லா இருக்குன்னு நமக்கு தோணுன சில படங்கள டாப் 10 ரேன்க் பண்ணுறோம். அம்புட்டுத்தேன்.(டாப் 10 காமெடி படங்கள்ன்னு லிஸ்ட் எடுத்தா, ரெண்டு மூணுதான் தேறும், அதுனால காமெடி காட்சிகள் டாப்பா இருந்த படங்களின் தரவரிசை). அப்புறம், ஜஸ்ட் காமெடி மட்டும்னதுனால, செம மாஸ் ஹீரோக்களின் சூப்பர் டூப்பர் ஹிட் படங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள படவில்லை.


10.நீதானே என் பொன் வசந்தம்/ மிரட்டல்
ரெண்டு படமுமே பெருசா ஒன்னும் சொல்றதுகில்ல. ஆனா சந்தானத்தின் கவுன்டர்ஸ் பல இடங்கள்ல ரசிக்கிற மாதிரியும், சிரிக்கிற மாதிரியும், போரிங்கான படத்துக்கு கொஞ்சம் பூஸ்ட்டாவும் இருந்துச்சு. சந்தானமும் இல்லன்னா மிரட்டல் பார்க்குறது  கொஞ்சம் கஷ்டம்தான். நீ.எ.பொ.வல சந்தானம் காமெடியும் சமந்தாவும்....

9.அட்டகத்தி/காதலில் சொதப்புவது எப்புடி
ரெண்டுமே புது டைரக்டர்ஸ் படம். ரெண்டுக்குமே காதலில் சொதப்புறதுதான் களம். காமெடியான களம். அட்டகத்தி சென்னை புறநகர் பேஸ்ட் இளைஞர்களின் அடாவடிகளுடன் கூடிய காமெடி, கொஞ்சம் சீரியஸா பார்த்தா சிரிக்கலாம். ஆனால், கா.சொ.எ எல்லாருக்கும் பொதுவான காமெடி. கா.சொ.எக்கு இன்னும் கொஞ்சம் அதிக ரேன்க் கொடுக்கலாம்ன்னாலும், இங்க ஜஸ்ட் காமெடிய வச்சி மட்டும் ரேன்க் பண்ணுறதால 9.

8.சுந்தரபாண்டியன்
சூப்பர்  ஹிட்டு படம். எல்லா மேட்டரையும் சரியா மிக்ஸ் பண்ணிருந்தாங்க. சூரியோட கவுன்டர்ஸ் மட்டுமில்லாம, முக்காவாசி படம் பூராவே காமெடி டோன் இருந்துச்சு.

7. 3/சகுனி
ரெண்டுமே  ரொம்பவும் பில்ட்அப் கொடுத்து மொக்க வாங்குன படங்கள். 3ல சைக்கோ, தற்கொலைன்னு பயம் காட்டுனாங்க. சகுனில ஸ்க்ரீன்பிளே  சறுக்கிடுச்சு. ஆனா ரெண்டு படத்துலயும் காமெடி போர்ஷன் சூப்பர். மெரீனால டைரக்டர் சொன்னத மட்டும் செஞ்ச சிவகார்த்திகேயன், 3ல டைமிங் காமெடில  கலக்கிருந்தாரு. அதே மாதிரி, சகுனி படத்துல ஆட்டோ சவாரில சந்தானமும்-கார்த்தியும் அடிக்கிற லூட்டிகள் ஆதித்தியால பார்க்கும்போது நல்லாவே இருக்கு. யூரின் பாஸ் பண்ணி பைன் கட்டுற சீக்வென்ஸ் செம காமெடி!

6.நான் ஈ
 மக்கள என்டர்டேய்ன் பண்ணுறதுக்காகவே அளவெடுத்து செஞ்ச படம். "ஈ"பண்ணுற காமெடிகள் அட்டகாசம். போனஸ்ஸா நட்புக்காக(!) சந்தானம்.. கிளைமேக்ஸ்க்கு அப்புறம் வர்ற காமெடி சீன்ஸ்க்காக ரெண்டு மூணு வாட்டி ரிப்பீட் பார்த்த படம்.

5.மனம் கொத்தி பறவை
 சிவகார்த்திகேயனோட முழுநீள ஹீரோ அவதார படம்.  மிச்ச சொச்ச, சொச்ச மிச்ச காமெடி நடிகர்கள் பலபேர கூட்டணி சேர்த்துகிட்டு படம் பூரா எதோ ஒரு விதத்துல சிரிப்பு வர்ற மாதிரி சீன்ஸ் இருந்துச்சு. பட்,  சிவகார்த்திகேயன் கிட்ட இருந்து நாங்க இன்னும் நிறைய எதிரபார்குறோம் பாஸ்.

4.நண்பன்
 ஷங்கர் படம்னா எப்பவுமே காமெடி அளவா இருக்கும். ஹிந்தில ஹிட்டான அந்த படிப்ஸ் ஸ்டுடண்ட் கேரக்டருக்கு சத்தியன் செமையா பொருந்தினாரு. சத்தியனின் பாடி லேங்க்வேஜ், டயலாக் டெலிவரி எல்லாமே சூப்பர். கூடவே மாஸ் ஹீரோக்கள்ள காமெடி சரியா வர்க்அவுட் ஆகுற விஜய், அப்கமிங்ல ஜீவான்னு எல்லாரும் இருந்ததுனால, என்ஜாய் பண்ணி பார்த்த படம். 

3. கலகலப்பு
உள்ளதை  அள்ளித்தா, உனக்காக எல்லாம் உனக்காக போன்ற படங்கள்ல கவுண்டமணி எனும் லெஜன்ட், அப்புறம் வின்னர், கிரி பீரியட்ல வடிவேலுன்னு கூட்டணி வச்சி காமேடில கலக்குன சுந்தர்.சி அப்பால காணமல் போயிட்டாரு. அப்புறம் சுந்தர்.சி இயக்கி, நடிச்சி வெளிவந்த சில படங்கள பார்த்தப்புறம், இந்த மனுஷனுக்குன்னு பெருசா காமடி நாலெட்ஜ் இல்ல, அந்தந்த பீரியட்ஸ்ல அசிஸ்டென்ட்ஸ்ஸா இருந்த சுராஜ், பூபதி பாண்டியன் மாதிரி ஆட்கள் தான் எடுத்து கொடுத்துருக்காங்கன்னு ஒருமுடிவுல இருந்தப்ப, சுந்தர்.சியின் கம் பேக் பிலிம். பர்ஸ்ட் ஆப் "அகில உலக சூப்பர்ஸ்டார்"சிவா, செகன்ட் ஆப் "காமெடி சூப்பர்ஸ்டார்"சந்தானம், அப்புறம்  இளவரசு மாதிரி துணை கேரக்டர்ஸ்ன்னு நிஜமாவே கலகலப்புதான். 
ஒரு வேளை, இப்போ வசன அசிஸ்டென்ட்டா இருந்த கேபிள்சங்கர்அண்ணன்தான் இந்தவாட்டி கலகலப்புக்கு காரணமா இருந்துருப்பாரோ?

2. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்
"என்னாச்சி?"சந்தானம் ஃபேன்ஸ்ன்னு சொல்லிட்டு சந்தானம் இல்லாத ஒரு படத்துக்கு  லீட் பொசிஷன் கொடுத்துருகீங்க?ன்னு கேட்டிங்கன்னா, அதுதான் பாஸ், இந்த படத்தோட வெற்றியே. செமையா என்ஜாய் பண்ணி பார்த்த படம். பிரேம், சரஸ், பக்ஸ், பஜ்ஜி ஆக்டிங், சான்ஸ்லெஸ்!! டயலாக் டெலிவரி, பாடி மாடுலேஷன் எல்லாத்தையும் விட்டுருங்க, ஒவ்வொரு சீனுக்கும் அந்த மூணு பிரெண்ட்ஸ்மூஞ்சில கொடுக்குற எக்ஸ்பிரெஷன்ஸ் இருக்கே.. செம செம!!  டைரக்டர் வேலைக்காரர்ன்னு தோணுது, இவருகிட்ட இருந்தும், இவரு மாதிரி புதுசா வர்ற டைரக்டர்ஸ் கிட்ட இருந்தும், நாங்க இன்னும் நிறைய எதிர் பார்க்கலாம்ன்னு தோணுது!

1. ஒரு கல் ஒரு கண்ணாடி
 குறிப்பிட்ட ஒரு வருசத்துல, ராஜேஷ்-சந்தானம் கூட்டணில ஒரு படம் வந்துருக்குன்னா, அந்த வருசத்துல அத தாண்டி இன்னொரு படம் எப்புடிங்க பர்ஸ்ட் ப்ளேஸ்ல வரும்? சோ, நீங்க எதிர்பார்த்த மாதிரியே ஓகே ஓகே பர்ஸ்ட்டு. ஒவ்வொரு ராஜேஷ் படமும் சந்தானத்துக்கு ஒவ்வொரு டர்னிங் பாயிண்ட்ஸ். இந்த படத்த பத்தி நாங்க பலவாட்டி எழுதியாச்சி.. பல வாட்டி பார்த்தும் இன்னும் அலுக்கல! இனிமேலும் அலுக்காது! அடிச்சி சொல்லுறோங்க, "ஆல் இன் அழகுராஜா"மட்டுமில்ல, அதுக்கு பிறகும் ராஜேஷ்-சந்தானம் கூட்டணில வரபோற படங்கள் எல்லாமே பிளாக்பஸ்டர்ஸ்தான்.
***************************************


ஆக, கடந்த சில வருஷங்கள விட இந்த  2012 வருஷம் காமெடி ரசிகர்களுக்கு  சிறப்பாவே இருந்துச்சு. இது 2013ல யும் தொடரும்னு தெரியுது! 2013 வருட ஆரம்பத்துலையே  சந்தானம், பவர்ஸ்டார் காம்பினேஷன்ல லட்டு தின்ன ரெடியா  இருங்க காமெடி ரசிகர்களே!!

விஸ்வரூபம் - திரை விமர்சனம் (முடிந்தவரை நடுநிலையாக)

$
0
0

விஸ்வரூபம் திரை விமர்சனத்தை கமல் ஹாசனும் உலகநாயகனும் பதிவின்கடைசி வரிகளில் இருந்து ஆரம்பிப்பதே முறையாக இருக்கும் என்று நினைக்கிறேன். 

"விஸ்வரூபம் ட்ரெயிலர் படம் மீது பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை, இருப்பினும் வேட்டையாடு விளையாடு போன்ற ஒரு முழு கமெர்சியல் என்டேர்டைனராக அமைந்தால் பெரு மகிழ்ச்சி"

படம் பார்த்து முடிந்ததும் அந்த வரிகள் எவ்வளவு உண்மை என்பது ஆச்சர்யமாக உள்ளது. விஸ்வரூபம் படத்தை இரு வேறு கோணங்களில் இருந்து விமர்சிக்கலாம். இதில் எதை தெரிவு செய்வது என்கிற தடுமாற்றம் இருக்கிறது. வழக்கம் போல நம்ம பாணியில "கதை, படத்தின் மூலம் உருவான அரசியல்கள்"போன்ற வஸ்துக்களை தள்ளி வைத்துவிட்டு முடிந்தவரை நம்மளவில் நடுநிலையான ஒரு விமர்சனம். 

ஏழு வருடங்களுக்கு (வேட்டையாடு விளையாடுவிற்க்கு) பிறகு  கடைசிவரை பார்த்து ரசிக்கக்கூடிய ஒரு கமல் படம். நூறு சதவீத கமெர்சியல் என்டர்டைனர் இந்த படம். "ராஜ் கமல்"நேம் கார்டு போட்டத்துல இருந்து "எண்டு"கார்டு போடுற வரைக்கும் கமல் ஆட்சிதான் படத்துல மேலோங்கி இருக்கு.  படம் முழுதும் "ஒங்கம்மாள ...... (கெட்ட வார்த்தை)...., எப்ப இருந்துடா ஒனக்கு தெரியும்?"அவங்கள பொறந்ததுல இருந்தே எனக்கு தெரியும்" போன்ற கமல் ப்ரேன்ட் காமெடி, வில்லனோட சின்ன பையன கமல் ஊஞ்சல்ல வச்சு ஆட்டுறப்போ பெரிய பையன் வந்து ஒக்காந்து ஆட்ட சொல்றது போன்ற சின்னச்சின்ன இயக்குனர் டச்கள், ஒரு தமிழ் படத்துக்கே உரிய காமெடி, சென்டிமெண்ட், ஆக்ஷன், அப்பப்போ கவர்ச்சி (இது கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயம்) எல்லாத்தையும் சரி விகிதத்தில் கலந்த அதே நேரம் சுவாரஷ்யமான திரைக்கதை, கமலோட கலை ஆரவத்துக்கு தீனி போடுற ஒரு கதக் நடனக்காட்சி, அதற்க்கு ஏற்ற நளினம், என் போன்ற கமல் ரசிகர்கள தங்களையும் அறியாமல் விசில் போட வைக்கும் ஒரு சண்டைக்காட்சி, அத்துடன் ஆரம்பிக்கும் ரெண்டாம் அவதாரம். இதைவிட ஒரு கமல் ரசிகனுக்கு என்ன சார் வேணும்? இது நூறு வீத கமல் படம், கமல் ரசிகர்களுக்கும், அனைத்து தமிழ் ரசிகர்களுக்கும் கமல் ஒரு பெரிய விருந்தே வச்சிருக்கார். அஜித் ரசிகர்களுக்கு மங்காத்தா எப்படியோ, கமல் ரசிகர்களுக்கு விஸ்வரூபம் அப்படி.


படத்தோட பிளஸ்சஸ் மைனஸ்சஸ் பத்தி இனி பார்க்கலாம்.

1. படம் முழுவதும் கமல் கமல் கமல். சில இடங்களில் கமலுக்கு வயசானது தெரிஞ்சாலும், தனது நடிப்பால நம்மள மொத்தமா கட்டிப் போடுறாரு மனுஷன். அப்பாவித் தனமா மூஞ்சிய வச்சிக்கிட்டு பேசுற பல வசனங்கள் செம டைமிங். தசாவதாரம், மன்மதன் அம்புல நொந்து போனவங்களுக்கு பெரிய ரிலீப் விஸ்வரூபத்துல இருக்கு. படத்துல எப்ப எப்ப தேவையோ அப்ப அப்ப  சின்னதா வந்து விழும் காமிக் ரிலீப் இது ஒரு சுப்பர் ஹிட் படம்குறதுக்கான முதல் அறிகுறி.

2.  ஒரு இயக்குனாரா கமல் நிறையவே பாலிஷ் ஆகியிருக்காரு. குட்டிக் குட்டியா நெறைய ஷாட்கள், ஒரே ஷாட்ல பல பக்க வசனங்களால சொல்லமுடியாத பல விஷயங்கள சொல்லிடறார். உலக நாயகன கொஞ்சம் தள்ளிவைத்துவிட்டு கதைக்கு என்ன தேவையோ அத செஞ்சிருக்கார். கமல் இஸ் பாக் டு போர்ம்.

3. தமிழ் சினிமாவின் சில க்ளீஷேக்களை பயமே இல்லாமல் உடைத்திருக்கறார். குறிப்பா டூயட் பாட்டு கெடயாது, தமிழ் சினிமால வழமையா வரும் காதல்ங்கற கத்தரிக்காய் கெடயாது, ஓவர் சென்டிமென்ட் கெடயாது, எல்லா கதாபாத்திரங்களும் அவுங்க அவுங்க ஸ்பேஸ்  இருக்கு, கதாநாயகனை உயர்த்த மற்றைய கதாபாத்திரங்கள் வலிந்து தாழ்த்தப் படவில்லை (முட்டாள் FBI ஆபிசர் பாத்திரம் தவிர, அதுவும் இல்லன்னா எப்படி?), இதுல பெரிய விஷயம் என்னன்னா படம் முடியற வரைக்கும் இத நீங்க நோட்டிஸ் பண்ணவே மாட்டீங்க. அங்க நிக்கறாரு கமல்.


4. ஸ்ரேயா படங்களை விட அதிக க்ளீவேஜ் இருக்கு படத்துல, ஸ்ரேயா ஓகே, பூஜா குமார்? (என்ன சொல்றதுன்னே தெரியல, ஐ ஆம் வெரி கன்பியுஸ்டு!!)

5. ஒரு எக்ஸ்ட்ரா ஆர்டினரி சண்டைக் காட்சி இருக்கு படத்துல, ஆனா எனக்கு என்னமோ அது கொஞ்சம் ஒட்டாத மாதிரி (அதாவது ஒட்டுன மாதிரி) தெரியிது, பல ஹெலிகாப்டர் காட்சிகள், அப்கானிஸ்தான லாங் சாட்ல காட்டுற காட்ச்சிகள், சில ஆக்ஷன் சீக்குவன்ஸ் எல்லா இடத்துலயும் ஒட்டு வேலைப்பாடு ரொம்பவே தெரியுது, கைய வெட்டுறது, கழுத்த வெட்டுறது போன்ற இடங்கள்ள பிளாஸ்டிக் அப்படியே தெரியுது. கிராபிக்ஸ் டிப்பார்ட்மெண்ட் இன்னும் கொஞ்சம் யோசிச்சிருக்கனுமோ?

6. படத்துல நிறையவே ரத்தம், கொலை, நிறைய இடங்கள்ள முகம் சுளிக்க வைக்குது, (தீவிரவாதிய வேற எப்படிக் காட்டுறன்னு யாராவது கேள்வி கேட்டீங்க மூஞ்சில பூரான்  உட்ருவேன் ஆமா, கழுத்த வெட்டி ரத்தம் கொட்டக் கொட்ட கொன்னாத்தான் தீவிரவாதமா? ஒரே துப்பாக்கி குண்டுல, இல்லையின்னா மொத்தமா குண்டு போட்டு தடமே தெரியாம அழிச்சா அது என்ன அகிம்சையா?)


7. படத்துல, ஆடு இருக்கு, மாடு இருக்கு, ஆண்ட்ரியாவும் இருக்கு. (ஆண்ட்ரியா இருக்கறதே பிளஸ்ஸா, இல்ல ஆண்ட்ரியாவும் கூட  இருக்கறது மைனஸான்னு நீங்களே முடிவு பண்ணிக்கங்க)

8. ஷங்கர்-எஹ்ஷான்-லாய் இந்தியில எனக்கு பிடித்த இசையமைப்பாளர்கள் வரிசையில் உள்ளவர்கள். "கல் ஹோ நா ஹோ"படத்துக்காக தேசிய விருது வேற இருக்கு. ஆளவந்தான்ல இருந்து இதையும் சேர்த்து மூணு நாலு தமிழ் படம் இசை அமைத்திருந்தும் இதுவரை சரியான படம் எதுவும் அமையல. அது ஏன்னுதான் எனக்கும் புரியல.

9. படத்துல காரேக்டரைசேஷன் கொஞ்சம் சொதப்பல், எல்லா கதாபாத்திரத்துக்கும் மல்டிப்பிள் ஷேட் இருக்கே தவிர எந்த கதாபாத்திரத்துக்கும் ஒழுங்கான பேஸ் கெடயாது, எல்லாமே பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மென்ட் வீக் வகையறாதான். உதாரணமா ஹீரோ, வில்லன் ரெண்டுபேருமே முஸ்லிம், ஒருத்தர் தீவிரவாதி, இன்னொருத்தர் மதிப்புக்குரிய இந்திய  RAW ஏஜென்ட். தீவிரவாதிகளும் குண்டு வைக்கிறதுக்கு முன்னாடி நமாஸ் பண்றாங்க, ஹீரோவும் குண்டு வைக்கிறவன புடிக்கறதுக்கு முன்னாடி நமாஸ் பண்ணுறார். ரெண்டுபேருக்கும் கொள்கை அளவுல என்ன வித்தியாசம், ஏன் எதிர் எதிர் அணியில இருக்காங்கன்னு ஒரு சிங்கிள் ஷாட் கூட படத்துல இல்ல. முஸ்லிம் தீவிரவாதிகள வில்லனா காட்டிட்டு சைடுல ஹீரோ பிரெண்டா ஒரு ஜமாலையோ, இல்ல ஹீரோவுக்கு உதவுபவரா அப்துல் காதரையோ வைக்கிற  சாதாரண தமிழ் சினிமா டெக்னிக் தான் இங்கயுமா?


10. ராகுல் போஸ், நாசர், ஷரீனா வஹாப் போன்ற பல தேர்ந்த நடிகர்கள் இருக்கிறார்கள் படத்தில். முன்னவர் விஜயகாந்த் படங்களில் பார்த்த வாசிம்கான்களுக்கு மாற்றமாக ஒரு தீவிரவாதி, மஜ்னு சோனு சூடுக்கு அப்புறமா தமிழ்ல கத்திக்கத்தி கூப்பாடு போடாத தீவிரவாதி இவருதான்னு நினைக்கிறேன். மற்றைய ரெண்டுபேரும் வேஸ்ட்டட்.

11. கதை, படம் பேசும்/உருவாக்கும் அரசியல் போன்ற வஸ்த்துக்களை கவனிக்காம, ரொம்ப ஆராய்ச்சி பண்ணாம, ரெண்டர மணி நேரம் வெறும் என்டேர்டைன்மன்ட்ட மட்டுமே மனசுல வச்சி பார்த்தா ஒரு முழுத் திருப்தி தரக்கூடிய படம்.  (இதுக்கும் மேல ஒரு படத்துக்கு ஏதும் பிளஸ் தேவையா?)

ஐ ஆம்  வெய்ட்டிங்  பார் விஸ்வரூபம் பார்ட் II இன் இந்தியா....

நம்ம ரேட்டிங் : 7.5/10

****************************************

பதிவுக் குறிப்பு:
விஸ்வரூபம் படத்துக்கு நேர்மையான விமர்சனம்ன்னு எதுவும் வருமான்னு எனக்கு தெரியல, அதுக்கு என்ன காரணம்ன்னு உங்க எல்லாருக்கும் தெரியும்.

முதலாவதா ஒரு விஷயத்த சொல்லிக்கனும். "ஒரே மதத்தை சேர்ந்த, ஆனா இரு வேறுபட்ட புரிதல் அல்லது கொள்கை உடைய இரண்டு தனி நபர்களினதும் அவர்களை சூழ உள்ளவர்ககளினதும் போராட்டம்"தான் படத்தோட கதைன்னு எனக்கு தோணுது. படம் எந்த ஒரு இடத்திலும் இஸ்லாம் மதத்தை அவமதிக்க வில்லை, முஸ்லீம்களை அவமதிக்கிறதா, இல்லையான்னு என்னை கேட்டால் இல்லன்னுதான் சொல்லுவேன், ஆனா அவமதிக்குதுன்னு யாராவது எடுத்துக்க இடம் இருக்கான்னு கேட்டா இருக்கு. இங்கதான் படத்தோட பிரச்சினையே இருக்கு.  அதுக்காக தடை செய்யப்பட வேண்டிய படமான்னு கேட்டால் கண்டிப்பா இல்ல. ஹிந்தில "நியூ யோர்க்", "மை நேம் இஸ்  கான்", "குர்பான்", "மிஷன் இஸ்தான்புல்", ஹாலிவூட்ல "Traitor"போன்ற படங்கள் ஆரம்பித்து வைத்த விவாதத்தை தமிழில் விஸ்வரூபம் ஆரம்பித்து வைத்திருக்கிறது. அந்த படங்கள் எப்படி ரெண்டும் கெட்டானாக அலசியதோ, விஸ்வரூபமும் அப்படியே, அதை தவிர இஸ்லாத்தை அவமதித்து விட்டது, சிறுபான்மை மக்களை கமல் தாக்குகிறார்ன்னு கூச்சல் போடுற அளவுக்கு கேவலமான படம் ஒன்னும் கெடயாது. அதுக்காக கமல் தவறே செய்யலைன்னு சொல்லவும் முடியாது. படம் ஆரம்பித்து வைத்த விவாதத்தை ஆக்கபூர்வமான முறையில் தொடர வேண்டியவர்கள் கண்மூடித் தனமாக படத்தை எதிர்த்து ஒரு வரலாற்று தவறை செய்துவிடாமல் இருக்கனும்ங்கிறதே ஒரே ஆசை.


டிஸ்கி: அங்க படத்துக்கு தடைன்னு என்னிக்கி அறிவிச்சாங்களோ, அன்னில இருந்தே நம்ம ராசு மாமா, "படத்தப் பாரு படத்த பாரு"ன்னு ஒரே வற்புறுத்தல். வெள்ளிக்கிழமை இங்க "கான்"ன்னு பனிப் புயல் வந்ததால பாதை எல்லாம் மூடி படம் பார்க்க போக முடியல. இன்னிக்கி காலையில பாதை சீராக இல்லாதபோதும், ரிஸ்க் எடுத்து நூறு மைல் வண்டி ஓட்டி, மூணு மணிக்கே தியேட்டர் வாசலுக்கு போயி, டிக்கெட் கிடைக்காததாலஅடுத்த காட்சிக்காக ராத்திரி பத்து மணி வரைக்கும் குளிர்ல தியேட்டர் வாசல்ல காத்திருந்து பார்த்ததுக்கு படம் "ஒர்த்துதான்".

டிஸ்கி: தமிழ் நாட்டிலும் படம் வெளியாகி அனைவரும் பார்த்தபின் கருத்தியல் ரீதியாக படத்தை விமர்சிக்கலாம்ன்னு நினைக்கிறேன். இப்போதைக்கு சொல்லக்கூடியது, குறைவில்லாத என்டேர்டைன்மென்ட், ஒரு அக்மார்க் கலப்படமற்ற "கமல்"சினிமா. ஒரு கமல் சினிமாவில் என்ன நிறை இருக்குமோ அனைத்தும் இருக்கு, என்ன குறை இருக்குமோ அவையும் அனைத்தும் இருக்கு. அதுதான் விஸ்வரூபம். மற்றும் படி ஹாலிவூட் தரத்துல ஒரு தமிழ் சினிமான்னு சொல்ற அளவுக்கு தமிழ் சினிமா ஒன்னும் கேவலமும் கெடயாது, விஸ்வரூபம் ஒன்னும் எக்ஸ்ட்ரா ஆர்டினரி மேக்கிங்கும் கெடயாது. 

விஸ்வரூபம், கமல், பி ஜே - சர்ச்சைகளும் சில கருத்துக்களும்

$
0
0
பதிவரானதுக்கு அப்புறம்தான் எத்தன எத்தன பிரச்சினை. முன்பெல்லாம் பதிவுகள படிக்கறப்போ ஒரு சந்தோஷம் இருக்கும், இப்போல்லாம் இந்த பக்கம் வந்தாலே ஒரே மன உளைச்சல், தலைவலி, வயிற்ருப் போக்கு, வாந்தி பேதிதான். ஏதாவது ஒரு சின்ன காரணம் கெடைச்சா போதும் அடிச்சிக்கறதுக்குன்னு ஒரு கூட்டமே இருக்கு, இதுக்கு நடுவுல எரியற நெருப்புல எண்ணைய ஊத்திவிட்டு குளிர் காயறதுக்குன்னு ஒரு கூட்டம், நமக்கு சம்பந்தமே இல்லையின்னாலும் ஒரு நாலு பதிவ போட்டு ஹிட்டு வாங்குறதுக்கும் சண்டைய மூட்டி விடுரதுக்கும்ன்னு. இதெயெல்லாம் படிக்கறப்போ இதுல எல்லாம் இருந்து ஒதுங்கியே இருக்கலாம்ன்னு நினைச்சா, நீயும் ஒரு பதிவர், உனக்கும் சில சமுதாய பொறுப்பு இருக்குன்னு நம்மளையும் இழுத்து விடுறதுக்குன்னு நாலு நண்பர்கள். இந்த சின்ன வயசுல இத்தன பிரச்சினைகளையும் நான் எப்படித்தான் சமாளிக்க போறேனோ? என்ன நடந்தாலும் நடக்கட்டும்ன்னு என்னோட கருத்துக்களையும் இங்கே பதிவு செய்து விடுகிறேன்.


கமல் எனும் கலைஞருக்கு ஆதரவாளர்களும் எதிரிகளும் ஏராளம். உண்மைய சொல்லப்போனா எதிரிகள்தான் ஏராளம், எதோ ஒரு காரணுத்துக்காக அவர எதிர்கறதுக்கு ஏதாவது ஒரு கூட்டம் எப்பவுமே இருக்கும். அந்த கூட்டத்த எதிர்கறவங்க எல்லாரும் உடனே கமல் ஆதரவாளர்களாக மாறிடுவாங்க. கமல் எதிர்ப்பு தனிப்பட்ட குழு அரசியல விட பெரிதாக இருக்கறப்போ எதிரிக்கு எதிரி நண்பன்னு சில பேர் அந்த கூட்டத்த ஆதரிக்கவும் செய்வாங்க, இன்னும் சிலபேர் சும்மா இருந்த எவனயாவது சீண்டி விட்டு எதிர்ப்ப கிளப்பிவிட்டு அதுல குளிர் காஞ்சிட்டு இருப்பாங்க. இது இன்னிக்கி நேத்து இல்ல கடந்த பத்து பதினச்சு வருசமா நடத்துக்கிட்டுத்தான் இருக்கு. இன்னிக்கி என்னன்னா குழு அரசியல்கள் கமல் எதிர்ப்பையும் தாண்டி வலுப்பெற்றிருக்கு. அதனால எப்பவுமே ஒரு கலைப் படைப்பை "கலை நேர்த்தி/நேர்மை"அடிப்படையில் வைத்து விமர்சிக்கக் கூடியவர்கள் கூட, இந்த குழு அரசியலை மையப்படுத்தியே விமர்சனத்த தொடுக்கறாங்க. இப்படியே போய்க்கிட்டு இருந்தா சீக்கிரமே தமிழ் சினிமா ஹாலிவூட் குப்பைகளை மிஞ்சிவிடும்ங்கறதுல எந்த சந்தேகமும் இல்லை. இதுதான் நம் முன்னே இருக்கும் நீண்டகால பிரச்சினை. 

இத விட்டுட்டு குறுகிய கால பிரச்சினை என்னன்னு பார்த்தோம்னா விஸ்வரூபமும் அதை சூழ உள்ள சர்ச்சைகளும்.

முதலாவதா விஸ்வரூபம் படத்தை ஒரு சாதாரண வணிக சினிமாங்கற தரத்தை விட உயர்த்திப் பார்க்கவேண்டிய எந்த தேவையும் இல்லை. படம் ஒரு கருத்தையும் போதிக்கவும் இல்லை, எந்த நியாயமான விவாதத்தை கிளப்பவும் இல்லை. தீவிரவாதத்தையும், சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தையும், உலக அரசியல் குழப்பங்களையும் வணிகமாக்கும் சாதாரண மூன்றாம்தர ஹாலிவூட் உத்தி வணிக முயற்சிதான் இந்த சினிமா. படத்தில் போதிக்கப்படும் கருத்துக்கள் அனைத்தும் பொதுப்புத்தியின் அடிப்படையில் உருவானதே அன்றி எங்கும் ஒரு ஆழமான பார்வை கிடையாது. விஸ்வரூபம் படம் பார்த்தவர்கள் யாரும் இதை மறுக்க முடியாதுங்கறது என்னோட கருத்து. கமல் ஒரு நேர்மையான கலைப் படைப்பை கொடுக்க மறுபடியும் தவறிவிட்டார். இன்னுமொரு வகையில் சொல்லப்போனால் ஆயுத எழுத்துங்கற படத்தை எடுத்து மணிரத்தினம் எப்படி மணிரத்தினம்கற மாயையை உடைத்தாரோ அதே போன்று விஸ்வரூபம் படம் மூலம் கமல் என்கிற மாயையை கமலும் உடைத்திருக்கிறார். இனியும் ஒரு பொறுப்பு வாய்ந்த கலைஞராக கமல் குறைந்தபட்ச கலை நேர்த்தியுடன் செயல்படுவார் என்கிற நம்பிக்கை ஒரு தீவிர கமல் ரசிகனான எனக்குக் கூட இல்லை. வணிக வெற்றிக்காக கமல் எதையும் செய்வார் என மீண்டும் அடித்துக் கூறியிருக்கிறார் கமல்.

படத்தோட ஸ்கிரிப்ட் முழுசா எழுதி முடித்ததும் ஆப்ரூவலுக்காக அமேரிக்கா அனுப்பி வைத்ததாகவும், ஸ்கிரிப்ட்டில் எழுதிய பல சம்பவங்கள் அதன் பின்னர் நிஜத்தில் நடந்ததாகவும் சமீபத்தில் ஒரு தொலைக்காட்ச்சி நிகழ்ச்சியில் கமல் கூறுகிறார். ஒரு தமிழ் சினிமாவை எடுக்க அமெரிக்க அரசிடம் அனுமதி கோரும் கமல், தமிழ் நாட்டில் எத்தனையோ முஸ்லீம்கள் வாழும் போது, ஒரு முஸ்லீமிடம், தலிபான்கள் குரான் முன்னாடி கொல்றாங்களே இதத்தான் குரான் சொல்லுதான்னு ஒரு கேள்வி கூடவா கேட்க்க முடியாது? அது போகட்டும், இந்த படத்தின் தடையை அனுமத்தித்தால், ஒரு குழுவிடம் காட்டி அனுமதி பெற்றுவிட்டுத்தான் திரையிட வேண்டும்ன்னு எதிர்காலத்துல சட்டம் வரும்ன்னு பயப்படுபவவர்கள், விஸ்வரூபம் போன்ற முன்னுதாரணங்கள் வந்தால் ஒரு தமிழ் படம் எடுக்க கூட அமெரிக்க அரசிடம் அனுமதி கோரவேண்டி இருக்கும் அதனால் விஸ்வரூபம் போன்ற படங்களை எதிர்க்கிரோம்ன்னு சும்மா ஒரு பேச்சுக்கு கூட சொல்லாமல் இருப்பதும் இந்த எதிர்ப்பும் ஆதரவும் நேர்மையானதா இல்லை குழு அரசியலா என்கிற சந்தேகத்தை இன்னும் வலுப்படுத்தவே செய்கிறது.


இப்போ இந்த படத்த எதிர்க்கலாமா? கருத்தியல் ரீதியாக இந்த படத்துக்கு விமர்சனம் முன்வைக்கலாம், அதுதான் நியாயம், ஆனால் படத்தை கண்மூடித்தனமாக எதிர்க்க முடியாது. இந்தப் படம் இஸ்லாத்தை கேலி செய்கிறது என்கிற வாதம் எந்தளவு அபத்தமோ, இந்த படம் தீவிர வாதத்தை எதிர்கிறது எனும் வாதமும் அதே அளவு அபத்தமாகவே எனக்கு படுகிறது. ஒரு கலைஞனுக்கு அவனது எண்ணத்தில் உதித்த ஒன்றை ஒரு படைப்பாக்கி மக்கள் முன் சமர்ப்பிக்கும் உரிமையை யாரும் மறுக்க முடியாது, மறுக்கவும் கூடாது. ஒரு படைப்பை உருவாக்கும் வரையில்தான் அது நமக்கு சொந்தம், அதன் பின் அது நுகர்வோன் சொத்து ஆகி விடுகிறது என்பதை படைப்பாளியும் மறக்கக் கூடாது. ஆப்கான் - அமெரிக்கப் போராட்டத்தை ஒரு தமிழ் படமா எடுக்கனுமாங்கறது தேவை அற்ற வாதம். அதை தமிழ் படமா எடுக்கும்போது எப்படி வேணும்னாலும் எடுப்பேன்ங்கறதும் ஒரு பொறுப்புள்ள படைப்பாளி முன்வைக்கக் கூடிய வாதம் அல்ல. முடிவா விஸ்வரூபம் மீது தடை கோரி நடத்தப் பட்ட போராட்டம் நியாம் அற்றது, வன்மையாக கண்டிக்கப் பட வேண்டியது. அதேபோன்று, ஒரு குழு அந்தப் படத்தை தடை கோரி போராடியது என்கிற ஒரே காரணத்துக்காக, ஹாலிவூட் தரத்தில் ஒரு தமிழ் சினிமா, தீவிரவாதத்தை எதிர்க்கும் ஒரு அற்புதமான படம், இதை எல்லாரும் ஆதரிக்கனும், இதை எதிர்கறவன் எல்லாம் தீவிரவாதின்னு சொல்றதும் நேர்மை அற்ற வாதம்.

இதை நான் நேர்படவே கூறவேண்டும், திரு பீ. ஜே அவர்களின் ஒருமணிநேர விஸ்வரூப உரையை பார்க்கும் துர்பாக்கிய நிலைமை எனக்கும் ஏற்பட்டது. அந்த உரையை முற்றும் முழுதாக நான் கண்டிக்கறேன். மாற்றுக் கருத்தை நாகரீகமான முறையில் முன்வைக்க வேண்டும். மானுஷ்ய புத்திரனை வேறு பெயர் சொல்லி அழைப்பதையோ, பாரதிராஜாவை மோசமான முறையில் கேலி செய்வதையோ யாரும் அனுமத்திக்க முடியாது. எந்த ஒரு கருத்து மோதலிலும் தனி மனித தாக்குதல் இருக்கக் கூடாது. இஸ்லாத்தின் மீது சேறை வாரி இறப்பது விஸ்வரூபம் போன்ற படங்கள் என்று நீங்கள் நினைப்பீர்களேயானால் அது மிகவும் தவறு, இது போன்ற உங்கள் நடவடிக்கைகளும் தான். இஸ்லாம் அதிகளவில் தவறாக புரிந்துகொள்ளப் பட்ட ஒரு மார்க்கம் என்பதை ஒன்றுக்கு மேற்பட்ட முஸ்லீம் நண்பர்களுடன் பழகிய எவரும் மறுக்க மாட்டார்கள். முஸ்லீம் அல்லாதவர்கள் மட்டும் அல்ல முஸ்லீம்களில் கூட பெரும் பகுதியானவர்கள் இஸ்லாத்தை தவறாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பது இது சம்பந்தமாக வெளிவந்த சில பதிவுகளையும் அதற்க்கான பின்னூட்டங்களும் படிக்கும் ஒருவருக்கு தெளிவாகத் தெரியும். திரு கமல் ஹாசன் அவர்களுக்கு ஒரு படைப்பாளியாக எவ்வளவு பொறுப்பு இருக்கிறதோ அதைவிட நூறு மடங்கு அதிக பொறுப்பு பீ ஜே போன்ற தலைவர்களுக்கு இருக்கிறது. இஸ்லாத்தை மக்கள் தவறாக புரிந்து கொள்வதற்கு நீங்களே காரணமாகி விடாதீர்கள். விஸ்வரூபம் படத்தை நேர்மையான முறையில் விமர்சிக்கும் பொறுப்பு ஒரு கலை விமர்சகருக்கு இருப்பது போல, பீ ஜே அவர்களின் செயல்களை கண்டிக்கும் பொறுப்பு ஒவ்வொரு முஸ்லீமுக்கும் இருக்கிறது. 


தாலிபான் என்பது ஒரே அமைப்பாக இருந்தபோதும், தாலிபான்களில் அடிப்படை நோக்கம் சம்பந்தமாக மூன்று பிரிவு இருக்கிறது. ஒன்று ஆப்கானிஸ்தானை முன்னேற்ற வேண்டும் என்கிற நோக்கில் ஆப்கான் மக்களால் உருவாக்கப் பட்டது, ரெண்டு ஆப்கானிஸ்தானை பொருளாதார ரீதியிலும் கல்வி, கலாசார ரீதியிலும் பாகிஸ்தானுக்கு அடிமையாக வைத்திருக்கவேண்டும் என்கிற நோக்கில் பாகிஸ்தானினால் உருவாக்கப் பட்டது, மூன்று இஸ்லாத்தை பயங்கரவாத மதமாகவும், உலகின் பொது எதிரியாகவும் சித்தரிக்க வேண்டும், அதன் மூலமாக தனது எண்ணை வழியை அமைத்துக்கொள்ள ஈரானில் இருந்து ஆப்கானிஸ்தான் வரை அனைத்து நாடுகளையும் அடிமைப்படுத்த அமெரிக்காவால் உருவாக்கப் பட்டது. இதில், இஸ்லாத்துக்கான போராட்டம், ஜிஹாத் இதர விதரங்கள் எங்கும் இல்லை. சுய நிர்ணய உரிமைக்காக போராடும் தலிபான்களை எதிர்க்க வேண்டிய எந்த அவசியமும் அமெரிக்க அடிவருடிகளை தவிர யாருக்கும் இல்லை, அதே போன்று இஸ்லாத்தின் பெயரை களங்கப்படுத்த பெண்கள் உரிமையயை, சிறுவர் உரிமையை மறுக்கும் தலிபான் பிரிவினரதும், பொருளாதார ரீதியில் ஆப்கானை வீழ்த்த புத்தர் சிலையை தகர்த்த பிரிவினரையும் மதத்தின் பெயரால் ஆதரிக்கும் எந்த தேவையும் உலகில் எந்த மூலையில் உள்ள எந்த முஸ்லீமுக்கும் இல்லை. இதையும் மீறி ஆப்கான் போரும், அல்கயிதா, தலிபான் தரப்பும் இஸ்லாம் வளர்க்க ஜிஹாத் நடத்துவதாகவும், புனிதப் போராளிகளாகவும், அமேரிக்கா தீவிரவாதத்துக்க்கு எதிரான போர் நிகழ்த்துவதாகவும் இன்னும் யாரும் கற்பனை பண்ணிக்கிட்டு இருந்தா, விஸ்வரூபம் கூறும் "அமெரிக்கன் எண்ணைக்காக போராடுறான் (உண்மை), நாம அல்லாஹ்வுக்காக போராடுறோம் (சுத்தப் பொய்)"டயலாகை நம்பிக்கிட்டு இருந்தா அதைவிட முட்டாள் தனம் எதுவுமே இருக்காது. 

இனி விஸ்வரூபம் படத்தின் கருத்தியல் சம்பந்தமாக சில கருத்துக்கள். 

1. தமிழ் சினிமாவுல இஸ்லாமியர்களை சித்தரிக்கும் போது காலா காலமாக இருந்துவரும் டைப் காஸ்டிங் கமலுக்கு தெரியாது ஒன்றும் இல்லை, அதை உடைக்க நினைக்கும்போது மதத்தையும், மதத்தை பின்பற்றுவோரையும் பிரித்து நோக்கக்கூடிய நிலைக்கு பார்வையாளனை தயார் படுத்த கமல் தவறிவிட்டார். அதற்க்கான சந்தர்ப்பங்கள் திரைக் கதையில் இல்லாமலும் இல்லை எனும்போது சற்று கவலை ஏற்படவே செய்கிறது. எந்த ஒரு மதத்திலும் மதத்தை சரிவர புரிந்துகொள்ளாத ஒரு கூட்டம் இருக்கவே செய்யும், அது மதத்தின் பெயரால் செய்யும் பல காரியங்கள் மதத்தை இழிவுபடுத்துவதாக அமைந்துவிடும். சரியான புரிதல் இல்லாதபோது, மூன்றாம் தரப்பு அந்த மக்களை இலகுவில் ஆட்டி வைக்க முடிகிறது. தலிபான்கள் எது செய்தாலும் கண்மூடித்தனமாக ஆதரிக்கும் ஒரு கூட்டம் இருப்பதும் சரியான புரிந்து கொள்ளல் இல்லாததனாலேயே.


2. அமரிக்கர்கள் பெண்களையும், குழந்தைகளையும் கொல்ல மாட்டார்கள்ன்னு தீவிரவாதி வாயாலேயே வாறமாதிரி வசனம் அமைக்கும் போது (அடுத்த காட்சியிலேயே பெண்கள், சிறுவர்கள் தங்கியிருக்கும் இடத்தின் மீது அமெரிக்க வானூர்திகள் கூண்டு வீசுவதாக காட்சி அமைத்த போதும்), அமெரிக்க வீரன் சுட்ட குண்டு தவறுதலாக ஒரு பெண்ணின் மீது பட்டுவிட அவன் முகம் சுழிப்பதாக காட்சி அமைக்கும் போது , தீவிரவாதிகள் கொலைசெய்யும்போது பாவிக்கும் குரான் வாசகங்கள், அல்லாஹு அக்பர் கோஷங்கள் தீவிரவாதமும் ஜிஹாதும் ஒண்ணுன்னு சொல்லற ஒற்றைப்படை பார்வயத்தான் உறுதி செய்யுது. மனிதர்களை கொலை செய்வது எவ்வளவு பெரிய தவறுன்னு இஸ்லாம் சொல்லக்கூடிய எந்த ஒரு விடயமும் படத்தில் காட்டப்படாமல் விடுபட்டது கவலை தருவது. ஒரு பொறுப்புள்ள கலைஞராக, ஒன்று கமல் இந்த விடயங்களை தவிர்த்து இருக்கலாம், இல்லை அது தவறு என்பதை சொல்லி இருக்கலாம், தீவிரவாதத்திற்கு எதிரான குரான் வசனங்களை மேற்கோள் காட்டி இருக்கலாம். அல்லது நமது முஸ்லீம்சகோதரர்களாவது கமலையும் கலைஞர்களையும் ஒருமையில் திட்டாமல், குரானின் பெயரால் நடக்கும் கொலைகளை நியாயப் படுத்தாமல், குரான் போதிக்கும் அகிம்சையை எடுத்துக் காட்டியிருக்கலாம்.   

3.FBI அதிகாரியாக வரும் கறுப்பின பெண் முட்டாளாகவும், நாகரீகம் அற்றவளாகவும் சித்தரிக்கப்பட்டும் வெள்ளை அமெரிக்கர்கள் நாகரிக காவலர்களாக சித்தரிக்கப்பட்டும் இருப்பது. வெள்ளைக்கார FBI ஆபீசர் முட்டாள் தனமாக நடந்து கொள்வதாக காட்சி இருந்தாலும், அதற்க்கு காரணமாக கமலின் பையிலிருந்து அவர் கண்டெடுத்த துப்பாக்கியை காட்டி அவரது நடத்தையை நியாயப் படுத்தும்போது, இது கொஞ்சம் உறுத்தலாகவே இருந்தது. ஆப்மார்க் ஹாலிவூட் திரைப்பட கறுப்பின குண்டுப் பெண் தான் இவர். இந்த அளவு உலகத் தரத்துக்கு கமல் போயிருக்கத் தேவையில்லை. 

4. தலிபான்கள் பெண்களின் மீது அடக்குமுறையை கையாள்வதாகவும், சிறார்களின் குழந்தைப் பருவம் முற்றிலும் பறிக்கப்பட்டுவிடதாகவும் மிகவும் நுணுக்கமான காட்சிகள் அமைக்கப்பட்டபோதும், நாயகன் பாத்திரம் அதைக் கண்டு பச்சாதாப படுவதாக வந்தபோதும் இஸ்லாம் பெண்களின் உரிமையை, சிறுவர் உரிமையை எவ்வளவு காக்குறது என்பதை காட்ட மறுத்தது அமெரிக்கர்களின் பிரச்சாரத்தை வலிமைப் படுத்துவதாகே உள்ளது. ஒரு ஆப்கான் பெண் மருத்துவரை காட்டுகிறார், என்ஜினீரிங் படிக்க இங்கிலாந்து போக ஆசைப்படும் குழந்தையை காட்டுகிறார், வீட்டில் ஆங்கிலம் பேசும் பெண்ணை காட்டுகிறார், மனைவியின் ஆஸ்துமாவுக்கு வைத்தியம் செய்ய வரும் பெண்ணை வில்லன் கதாபாத்திரம் கேவலமாக திட்டுவதை காட்டுகிறார், அதற்க்கு அந்த பெண் அமெரிக்க கைதிகள் இருக்கும் இடத்தை அமெரிக்கர்களுக்கு தெரியப்படுத்திவிடக் கூடும் என காரண வசனம் வைக்கிறார், இருப்பினும் பெண்ணுரிமை, சிறார்கள் உரிமை மீறப்பட்டதாக மட்டுமே பார்வையாளன் எடுத்துக்கொள்ளக் கூடியாதாக அந்த காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது. கமலின் நேர்மைக்கும் வணிகத்துக்கும் இடையில் நடக்கும் போராட்டமோ? 

5. தலிபான்கள் பாவிக்கும் தொப்பி, தாடி, அலங்காரங்கள், அமெரிக்க உலங்கு வாநூர்த்திகளின் நிறம் அமைப்பு போன்ற பல நுணுக்கமான விடயங்களில் கமலின் ஆராய்ச்சியும், கவனமும் மெய் சிலிர்க்க வைக்கும் அதே வேளை, ஆப்கான்-அமெரிக்க போர் சம்பந்தமான அரசியலில் கொஞ்சமும் அக்கறை அற்று பொதுப் புத்தியை மட்டுமே மையமாக கொண்டு கதையையும், கதைக்கான கழத்தையும் அமைத்திருப்பது ரொம்பவுமே வேதனை தருகிறது. படத்தில் பலவாறான காட்சிகளும் இருக்கின்றன, ஆனால் ஒவ்வொரு காட்சிக்கும் அழுத்தம் கொடுக்கப்பட்ட விதம், கொஞ்சம் அமெரிக்க பக்கச்சார்ப்பு அதிகம் இருப்பதான, ஒரு வித சமநிலை பேணப்படாததான உணர்வை தருகிறது. ஒருத்தனுக்கு தீவிரவாதி இன்னொருத்தனுக்கு போராளின்னு சொல்வாங்க, அமெரிக்க ராணுவம் நடத்தும் கொடுமைகளையோ, குண்டு வீசி கொல்லப்பட்ட குழந்தைகள் பெண்களையோ, பொருளாதார ரீதியாக அந்த மக்கள் மீது தொடுக்கப்படும் யுத்தங்களையோ பற்றிப் பேசுவதை மிகக் கவனமாக தவிர்த்திருக்கிறார் கமல். தீவிரவாதி தலைவன் தனது குடும்பத்தை பறிகொடுத்துவிட்டு அழும் காட்சியும் அதற்க்கான அழுத்தமும், அவன் பெண் மருத்துவரை திட்டும் காட்சிக்கான அழுத்தத்தின் பாதி கூட இல்லை. விஜயகாந்த், அர்ஜுன் படங்களுக்கு எந்த விதத்திலும் சளைத்தது அல்ல இந்த படம், என்ன ஒரு வித்தியாசம் அவை இந்திய தேசப்பற்றை வலியுறுத்தும், இது அமெரிக்க தேசப்பற்றை வலியுறுத்துகிறது.

6. படம் தொடுக்கும் கருத்தியல் அரசியலை தள்ளிவிட்டுப் பார்த்தல் ஒரு ரசிக்கக் கூடிய என்டேர்டைன்மென்ட் சினிமாதான் இது. ஆயினும் விஸ்வரூபம் படம் எடுப்பதற்கு கமல் ஹாசன் தேவையில்லை, முருகதாஸ் போதும். கமல் ஹாசன் எனும் படைப்பாளியால் எல்லா விதத்திலும் இதை விட சிறந்த சினிமாவை வழங்க முடியும். இனிவரும் காலங்களிலாவது செய்வாரா கமல்? (விஜய் ரசிகர்களுக்கு வரிசையாக குருவி, வில்லு, சுறா போன்ற படங்களை பார்த்துவிட்டு காவலன் பார்த்ததான அனுபவம், கமல் ரசிகர்களுக்கு விஸ்வரூபம். அழுறதா சிரிக்கறதான்னு தெரியல)


டிஸ்கி: இன்னும் படம் சம்பந்தமான பல கருத்துக்கள் இருப்பினும் பதிவின் நீளம் கருதி(யும், பார்த்து ரொம்ப நாள் அனதால மறந்துவிட்ட காரணத்தினாலும்), இத்துடன் முடித்துக் கொள்கிறேன். 

டிஸ்கி: இஸ்லாத்தின் மீது அமேரிக்கா நிகழ்த்தும் மீடியா பயங்கரவாதமும், முஸ்லீம்கள், முஸ்லீம் நாடுகள் என பெயர் போட்டுக்கொண்டு சிலர்/அல்லது பலர் செய்யும் கலாசார பயங்கரவாதங்களும், அதற்க்கு தெரிந்தோ தெரியாமலோ இலக்காகிவிட்ட தமிழ்நாட்டு முஸ்லீம் மற்றும் முஸ்லீம் அல்லாத நண்பர்களும் தங்கள் பக்க நியாங்களையும், உண்மைகளையும் பரிமாறிக் கொள்ளவும், ஆரோக்கியமான விவாதங்களை நிகழ்த்தவும் தெரிந்தோ தெரியாமலோ கமல் மேடை அமைத்துக் கொடுத்திருக்கிறார். பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அறிவாளிகளின் கடமை. இதை விட்டு நம்ம குழாயடி சண்டைகளில்தான் நிலைத்திருக்க விரும்பினால் எந்த சுப்பனாலயும் நம்ம சமூகத்த காப்பாத்த முடியாது.

டிஸ்கி: நானும் எத்தன நாளைக்குத்தான் மொக்க பதிவாவே போட்டுக்கிட்டு இருக்கறது. சமுகப் பிரச்சினைகள்ள கருத்து சொல்லன்னும்கற ஆர்வம் எல்லாம் எனக்கும் வராதா? என்ன விடுங்கங்க, நான் எல்லாம் மொக்கப் பதிவர்ன்னு தெரிஞ்சே வாழ்ந்துக்கிட்டிருக்கேன், அவனவன் ஒளிவட்டப் பதிவர்ன்னு நெனச்சிக்கிட்டு மொக்க போட்டுக்கிட்டிருக்கான். 

Chennai Express : ஜாலி ரைடு

$
0
0

ஒரு ஜாலியான சினிமாவை உருவாக்க கதை அவசியமில்லை என்பதை மறுபடியும் நிரூபிக்கும் ஒரு படம் சென்னை எக்ஸ்பிரஸ். மீண்டும் ராகுலாக ஷாரூக் கான். தென்னிந்தியாவை கதைக்களமாக கொண்டு பெரும்பாலான தமிழ் நடிகர்களை வைத்து உருவாக்கி இருக்கிறார்கள். ஒரு வழக்கமான ரோஹித் ஷெட்டி இஷ்டைல் படம். முதல் நாள் கலக்சன் 33 கோடியாம். இனிமேல் படம் பற்றிய சிறு விமர்சனம் நம்ம பங்குக்கு.

படத்தின் கதை என்பதற்கு புதுசா ஒண்ணுமே இல்ல. 1980ல இருந்து நமக்கு தெரிஞ்ச அதே கில்லி/ரன்/பையா கதைதான் படம். திரைக்கதை சுவாரஷ்யமாக இருப்பதுதான் படத்தின் பலம். வழக்கமா கிளாஸ் கமெடியில பொளந்து கட்டும் ஷாரூக் இந்த படத்துல மாஸ் கமெடியில தூள் கெளப்புறாரு. கூடவே தீபிகா படுகோனே, கண்ணுக்கு இதமான இயற்க்கை காட்ச்சிகள், ஒளிப்பதிவு, மாஸ் மசாலா இசை அதுக்கு ஏற்ற நடனம் கொஞ்சூண்டு சண்டை காட்சி என சாதாரண சினிமா ரசிகனை முழுசா திருப்திப் படுத்தக் கூடிய படம். ஒரு சாதாரண 40 வயது பிரம்மச்சாரி, தானுண்டு தன் தாத்தா உண்டுன்னு வாழ்ந்துக்கிட்டிருக்கறவரு ஒரு ஆந்திரா அக்ஷன் மசாலா படத்துக்கு நடுவில மாட்டிக்கிட்டா எப்படியிருக்கும்கற அனுபவம்தான் படம். படத்தில் மருந்துக்கும் ரியலிசமோ லாஜிக்கோ கெடயாது. இந்த படத்துல நாம அதை எதிர்பார்க்கப் போறதும் கெடயாது, சோ நோ ப்ராப்ளம். 


படத்தில் ஷாரூக்கின் பெயர் ராகுல் என்பதிலேயே படத்தின் டோன் தெரிந்துவிடுகிறது (ஷாரூக் நடித்ததில் 80% கதாபாத்திரத்தின் பெயர் ராகுல் அல்லது ராஜ்). ஷாரூக் ரயில் ஏறும் வரை ஏனோ தானோ என போய்க்கொண்டிருக்கும் படம் தில்வாலே துல்ஹானியா லே ஜாயேங்கே படத்தின் புகழ் பெற்ற ரயில் காட்ச்சியை ஸ்பூப் செய்வதுடன் கழை கட்ட ஆரம்பிக்கறது. அடுத்தடுத்து வரும் ஒவ்வொரு காட்ச்சிகளும் காமெடி விருந்து. போகிற போக்கில் மை நேம் இஸ் கான், மெயின் ஹூன் னா, தில்  சே போன்ற ஷாருக் படங்கள் 3 இடியட்ஸ் மற்றுமல்லாது முத்து, கில்லி, அலெக்ஸ் பாண்டியன் என நிறையவே படங்களில் இருந்து பல பிரபலமான காட்ச்சிகளை உல்டா பண்ணியும் நேரடியாக பயன்படுத்தியும் திரை கதையின் சுவாரஷ்யத்தை கூட்டி இருக்கிறார்கள். பிரபலமான பல இந்திப் பாடல்களையும் விட்டு வைக்கவில்லை. இந்திய சினிமாவுக்கே உரித்தான மாஸ் மசாலா அக்ஷன் படங்களை கொண்டாடுவதுதான் இந்தப் படத்தின் முழு முக்கிய நோக்கம். அதில் பெரிய வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். அதற்க்கு ஏற்றாற்போல் கோட் பாதர் ஒப் இந்தியன் மசாலா மூவி, நம்ம தலைவருக்கு கடைசியில் ஒரு ட்ற்றிபியூட் படத்துடன் கன கச்சிதமாக பொருந்திப் போகிறது. மொத்தத்தில் இந்திய சினிமா பிரியர்களுக்கான படம். 

ஷாரூக் கான் பற்றி  சொல்லத் தேவையில்லை. மனிதருக்கென்றே உருவாக்கப்பட்ட பாத்திரம், தூக்கி சாப்பிட்டு போய் விடுகிறார். 40 வயசுன்னு சொல்லும் போதுதான் கொஞ்சம் நெருடலாக இருக்கிறது, ஷாரூக்கா அல்லது பாத்திர படைப்பான்னு தெரியல, 30 வயசுக்கு மேல சொல்ல முடியல. இடுப்பு வலி, தோள்பட்டை முறிவு எல்லாத்தும் பிறகு தீபிக்காவ தூக்கிட்டு 300 படி  ஏறுவதற்கும் (குறைந்தது 50 படியாவது நிஜமாக ஏறி இருப்பார்), அக்ஷன் பண்ணுவதற்கும் ஒரு தனி தைரியம் வேண்டும். தீபிகா தமிழ் பேசும்போது சற்று சிரத்தை எடுத்திருப்பது தெரிகிறது. 80% உச்சரிப்பு ஓகே. பார்க்கவும் அழகாக இருக்கிறார், ஓம் ஷாந்தி ஓம் படத்து அப்புறமாக அம்மணி ஆடை அணிந்து நடிச்ச படம் இதுதான்னு நினைக்கிறேன். கீப் இட் அப். சத்யராஜ் ட்ரேட் மார்க் என்னம்மா கண்ணுவுடன் வருகிறார். டெல்லிகணேஷில் இருந்து பல தமிழ் முகங்கள், பாதி நேரம் தமிழ் படம் பார்ப்பது போன்ற பீலிங். மசாலா படம் என்றதுமே கருத்து சொல்ல வேண்டுமே, பெண்களின் உணர்வுகளுக்கு மதிப்பு குடுக்கவேண்டும் என்பதும், ஒரு பிரச்சினையை சமாளிக்க இலகுவான வழி பிரச்சினையில் இருந்து ஓடுவது அல்ல, அதை எதிர்கொள்வது என்றும் மிக மிக சட்டிலாகவும் அழகாவும் பொருத்தமாகவும் கருத்து சொல்லியும் இருக்கிறார்கள்.  

மொத்தத்தில் சென்னை எக்ஸ்பிரஸ் ஒரு செம ஜாலி ரைடு. 


 *************************************** 
இனி சீரியஸாக சில கருத்துக்கள். 

திரைப்படங்கள் பற்றி எப்போதுமே இரு வேறுப்பட்ட பார்வை இருக்கிறது. சினிமா என்பதை சக்தி வாய்ந்த ஒரு கட்புல ஊடகமாக கொண்டு கதைகள் சொல்வதும் அதன் மூலமாக ஆக்கபூர்வமான பல விடயங்கள் செய்ய முற்படுவதும் ஒரு வகை. சினிமாவை ஒரு பொழுது போக்கு ஊடகமாக மட்டுமே கொண்டு அன்றாட வாழ்கையில் பிரச்சனைகளை மறந்து இரண்டு அல்லது இரண்டரை மணிநேரம் ஜாலியாக டைம் பாஸ் பண்ண வருபவர்களுக்கு குறைவில்லாத பொழுது போக்கை கொடுப்பது இரண்டாவது வகை. இந்த சினிமா இரண்டாவது வகை. எனவே இங்கே தமிழையும் தமிழர் கலாசாரத்தையும் கேவலப் படுத்துகிறார்கள் அது இதுன்னு வம்பு பண்ணத் தேவையில்லை. தமிழரின் விருந்தோம்பலையும், வீரத்தையும், நம் பெண்களின் தைரியத்தையும் சேர்த்துத்தான் சொல்லியிருக்கிறார்கள். நமக்கு வட இந்தியா என்பது எப்படி ஒற்றையாக தெரிகிறதோ அப்படியே அவர்களுக்கு தென் இந்தியா என்பது, மொழியாக தமிழ் மாத்திரமே இருந்தபோதும் சகல தென்னிந்திய கலாசாரங்களையும் ஒன்றாக போட்டு குழப்பியிருப்பதில் தெரிகிறது. இந்த படத்தை பொறுத்தவரை அது அவர்களது குற்றமும் இல்லை, அதை பெரிது படுத்த தேவையும் இல்லை. அதையும் தாண்டி பழிவாங்கியே தீரவேண்டும் என்று யாராவது நினைத்தால் கீழே உள்ள வீடியோ பார்க்கவும்


படத்தின் வியாபாரத்துக்காக ஷாரூக் தலைவரை பயன்படுத்திகிறார் என்று ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. ஷாரூக்கின் பேட்டிகளை நேரில் பார்த்தவர்களுக்கு தெரியும் தலைவர் மீது அவருக்கு இருக்கும் மரியாதை. ரா.ஒன் படத்தில் ஏற்பட்ட குறையை இந்த படத்தில் சரி செய்து இருக்கிறார். இங்கே எங்களுடன் இருக்கும் இலங்கை சிங்கள நண்பர் ஒருவர் சில மாதங்களுக்கு முன்பு தலைவரை சக் நோரிசுடன் ஒப்பிட்டு சில ரஜினி ஜோக்குகள் சொல்லி கிண்டல் செய்தார். அதே நண்பர், நேற்று சென்னை எக்ஸ்பிரஸ் "லுங்கி டான்ஸ்"  பார்த்தன் பின்னர் "I really didn't know rajni is such a big phenomenon in india, I'm really sorry for what I said before"ன்னு சொன்னாரு. அதைக் கேட்டதற்கு பிறகு ஷாரூக் மீது இருந்த மத்திப்பு இன்னும் கூடிவிட்டது. 

ஆரம்பம், ஆல் இன் ஆல் அழகுராஜா -இந்த தீபாவளிக்கும் இரட்டை விமர்சனம்.

$
0
0
தீபாவளியும் அதுவுமா தமிழ் படம் பார்க்கலைனா தெய்வ குத்தமாகிடுமேங்கற ஒரே காரணுத்துக்காக, பல தடைகளையும் கடந்து, ராசு மாமா பேச்சையும் மீறி, வழக்கம் போலவே மொக்க வாங்கிட்டு, நான் பெற்ற துன்பம் பெறுக  இவ்வையம்ங்கர தாரக மந்திரத்துக்கமைய உங்க உசுரையும் எடுக்கலாம்ன்னு ரொம்ப நாளைக்கு அப்புறமா ப்ளாக்கர் பக்கம் வந்திருக்கேன். இனிமே நம்ம விமர்சனத்த பார்க்கலாம்.

ஆரம்பம். 

ஒவ்வொருத்தர் வாழ்கையிலும் ஒரே ஒரு தடவைதான் தல தீபாவளி வரும், ஆனா தல ரசிகர்களுக்கு மட்டும்தான் ஒன்னுக்கு அதிகமா தல தீபாவளி கொண்டாடுற பாக்கியம் கெடைக்கும். இது அப்படி ஒரு தல தீபாவளி. அஜித்-விஷ்ணு-நயன் கூட்டணி, கூடவே ஆர்யா-தாப்சி-கிஷோர்-அதுல் குல்கர்னி-ராணா டகுபதின்னு ஏகப்பட்ட கூட்டம். மாஸ்க்கு அஜித்தும், காமெடிக்கு ஆர்யாவும், கண்ணுக்கு நயனும், மொக்கைக்கு தாப்சியும்ன்னு பார்ட் பார்டா பிரிச்சு கத எழுதியிருப்பாரு விஷ்ணுன்னு நினைக்கறேன். 

இப்பெல்லாம் தல கால் ஷீட் கெடச்சதும் மொத வேலையா, தல கையில ஒரு பைக், கார், அப்புறம் ஏதாவது இன்னுமொரு வண்டிய குடுத்து வேகமா ஓட்டவச்சு ஷூட்  பண்ணிக்கறாங்க, அப்புறம் அவர கொஞ்சம் தனியா நடக்கவச்சு, படத்துல இருக்கற மத்த ஒவ்வொரு நடிகர் கூடவும் தனித்தனியாகவும் கூட்டமாவும் சேர்த்து நடக்கவச்சி சூட் பண்ணிக்கறாங்க, அப்புறம் படத்துல வர்ர வில்லன் நடிகர், தலையோட தலையில துப்பாக்கி வச்சிருக்கறப்போ, தல ஒரு டயாலாக் பேசுற மாதிரி ஷூட் பண்ணிக்கறாங்க, கடைசியில அந்த ஒவ்வொரு சீனையும் பிரிச்சுப் பிரிச்சுப் போட்டு கொஞ்சம் காரம், ஸ்வீட் ஆங்காங்கே போட்டு எடிட் பண்ணி ஒரு படம்ன்னு ரிலீஸ் பண்ணிடறாங்க, இங்கயும் அதுவே நடந்திருக்கு. இருந்தாலும் ஒரு ஆர்டர்ல கரெக்டா அந்த சீன்ஸ் வர்ரதனாலயும், அங்காங்கே கதைன்னு ஒன்னு தல காட்டரதனாலயும், ஆர்யாவோட காமெடி, தலையோட எக்ஸ்ட்ரா ஆர்டினரி ஸ்க்ரீன் ப்ரெசென்ஸ் இருக்கறதனாலயும், அங்காங்கே எட்டிப் பார்க்கும் சில நிஜ சம்பவங்களும், அதை படத்துல கோர்திருக்கற விதமும் சேர்த்து, ஒருவேள படம் நல்லாத்தான் இருக்கோன்னு நமக்கே ஒரு டவுட்டு வாறமாதிரி ஒரு படம்.

படத்துல குறைன்னு சொல்றதுக்குன்னா ரெண்டே விஷயம், ஒன்னு நயன் கொஞ்சம் வயசா தெரியறாங்க, நயனுக்கு அழகே சுடிதார்தான், அது இங்க மிஸ்ஸிங். ரெண்டாவது அத்துல் குல்கர்னி போன்ற ஒரு எக்ஸ்ட்ரா ஆர்டினரி நடிகரையும், கிருஷ்ணா போன்ற ஒரு ரொம்ப கேப்பபில் நடிகரையும் கொஞ்சம் கூட ஈவு இரக்கமே இல்லாம வேஸ்ட் பண்ணியிருக்கறது. இன்னும் ஒன்னு சொல்லனும்ன்னா தமிழ் சினிமா VFX ஐ கொஞ்சம் ரொம்ப சீரியஸா எடுத்துக்க வேண்டிய நேரம் வந்திரிச்சு, குண்டு வெடிக்கற காட்ச்சிகள் VFX சுத்த சொதப்பல். மற்றும்படி இது கண்டிப்பாக மொக்கை இல்லை. கொடுத்த காசோ, செலவளிச்ச நேரமோ வேஸ்ட்டுன்னு சொல்லற படமும் இல்லை.  மிஸ் பண்ணிடாம கண்டிப்பா பாருங்கன்னு சொல்லற படமும் இல்லை. இந்த தீபாவளிக்கு தமிழ் படம் பார்க்கணும்னா ஆரம்பம் பாருங்க. அம்புட்டுத்தான் சொல்லலாம்.


ஆல் இன் ஆல்  அழகுராஜா

எல்லா பண்டிகையும் நமக்கு கொண்டாட்டமாவே அமைஞ்சுடுதா என்ன, எப்போவாவது குடும்பத்துல ஒரு பெருசு மண்டயப் போட்டோ, இல்ல நமக்கு ஒடம்பு சரியில்லாம போயோ, பண்டிக பனாலாகிடுறதில்லையா, அந்த மாதிரி ஒரு அசம்பாவிதம் தான் இந்த படம். இது நிஜமாவே ராஜேஷ் படமா, இல்ல ராஜேஷ்கிட்ட சரக்கு தீர்ந்திடிச்சான்னு என்ன ரொம்பவே யோசிக்க வச்ச படம் இது. ராஜேஷ் படத்துல இருக்கற எல்லாமே இருக்கு, ஆனாலும் இது ராஜேஷ் படம் மாதிரி இல்லாம இருக்கு, அது ஏன்னு எனக்கு கடைசிவர புரியவே இல்ல. படத்துல இருக்கற ஒவ்வொரு சீனும் நமக்கு போரடிச்சு போதை ஏறி அது தெளிஞ்சதுக்கு அப்புறமும் முடியாம ஜவ்வு மாதிரி இழுத்துக்கிட்டே போறதுதான் இந்த படத்தோட முக்கிய குறைன்னு நினைக்கறேன். நெறயவே ஸ்டார் காஸ்ட் இருக்கு படத்துல, எதுவுமே வேர்த்தியா இல்ல, தலைவர் கூட நெறைய இடங்கள்ள நம்மள கவுத்துடுராறு. படம் பார்கறவங்க பாதி நேரத்துக்கு மேல தேட்டர் ஸ்க்ரீன பார்க்காம அவுங்க மொபைல் ஸ்க்ரீனையே பார்த்துக்கிட்டு இருக்காங்க, படத்துல வார ஒவ்வொரு சீனுக்கும், தேட்டர் ஆடியன்ஸ்ல யாராச்சு ஒருத்தர் போதும்யான்னு சொல்லிக்கிட்டே இருக்காங்க.

அப்போ இந்த படத்துல பிளாஸ் பாயிண்டே இல்லையான்னு கேக்காதீங்க, இருக்கு. அதுல முக்கியமா ரெண்டு பாயிண்ட மட்டும் உங்களுக்கு சொல்றேன். ஒன்னு இந்தப் படத்த பார்க்கற ஒவ்வொருத்தருக்கும் அவங்களோட பள்ளி நாட்கள் கண்டிப்பா ஞாபகம் வரும், அதாவது "எப்படா கிளாஸ் முடியும், எப்படா வீட்டுக்கு போவோம்"ன்னு நாம தவிச்ச தவிப்பு இருக்கே, படம் ஓடுற மூணு மணிநேரமும் உங்க கண்ணு முன்னாடியே நிக்கும். ரெண்டாவது, திரை விமர்சனம்ங்கற  பேர்ல படத்தோட கதைய விலாவாரியா எழுதி ஒப்பேத்துற விமர்சகர்களுக்கு ராஜேஷ் சரியான சவால் விடுத்திருக்காரு, முடிஞ்சா படத்துல என்ன நடத்துச்சுன்னு சொல்லுங்கடா பார்க்கலாம்ன்னு நம்ம விமர்சகர்கள பார்த்து கேக்கற கேள்வி இருக்கே, சார் இந்த திமிரு, உங்கள எங்கயோ கொண்டு போகப்போகுது.

ஆன் ஏ சீரியஸ் நாட், படத்தோட ஒன் லைனர் என்னன்னா, அப்பன் செஞ்ச தப்புனால பிரிஞ்சு போன ரெண்டு குடும்பத்த மகன் எப்படி சேர்த்து வைச்சி அப்பன் செஞ்ச தப்ப திருத்திக்கறாருங்கறதுதான். இந்த ஒன் லைனருக்கு வழக்கம் போலவே செம இண்டரஸ்டிங்கான காரக்டர்ஸ் புடிச்ச ராஜேஷ், வழக்கம் போல இண்டரஸ்டிங்கான ஸ்க்ரீன் ப்ளே எழுதறத்துக்கு பதிலா, வெறும் மொக்க சீன்கள் மட்டுமே எழுதி அத தொகுப்பாக்கி ஒரு படமா குடுக்க ட்ரை பண்ணியிருக்காரு. இந்த பருப்பு உள்நாட்டுல மட்டுமில்ல, வெளிநாட்டுல கூட வேகாது பாஸ், சீக்கிரமே முழிச்சுக்கோங்க, இல்லையின்னா S.J சூர்யா நிலைமைதான் உங்களுக்கும். சொல்றத சொல்லிட்டோம், த சாய்ஸ் இஸ் யுவர்ஸ்.

Krrish 3 சூப்பர் ஹீரோ ஒரு அலசல்

$
0
0
வார்னிங்: ஸ்பாய்லர்ஸ் உண்டு (படம் வந்து எம்புட்டு நாளாச்சி, இதுக்கப்புறம் ஸ்பாய்லர்ஸ் இருந்தா என்ன, இல்லாட்டி என்ன)

வலது பக்கமிருந்து மூணாவதா ஒக்காந்து இருக்கதுதான் நம்ம ஹன்சிகா ஆண்டி.

Koi mil gaya (2003), க்ரிஷ் (2006) வரிசையில் ராகேஷ் ரோஷன், ஹ்ரிதிக் ரோஷன் கூட்டணியின் மூன்றாவது சூப்பர் ஹீரோ படம். Marvel, DC  காமிக்ஸ்களின் சூப்பர் ஹீரோக்களுக்கு இணையான இந்திய சூப்பர் ஹீரோ நம்ம இந்த க்ரிஷ். முதல் படத்தில் ஒரு வேற்றுக் கிரக வாசிக்கு உதவி செய்து அதன் மூலமா சில பல அதீத சக்திகள் ரோஹித் மெஹ்ரா (ஹ்ரித்திக் ரோஷன்) என்னும் மூளை வளர்ச்சி குறைந்த இளைஞனுக்கு கிடைக்கிறது. இது அவனுடன் நின்று விடாது அவன் வழித்தோன்றல்களுக்கும் கடத்தப் படுகிறது. இரண்டாவது படத்தில் ரோஹித் மெஹ்ராவின் மகன் கிருஷ்ணா அதீத உடல் பலம், வேகம் போன்ற ஆற்றல்களுடன் இருக்கிறார். ஒரு தீவிபத்தில் இருந்து மக்களைக் காப்பாற்ற க்ரிஷ் அவதாரம் எடுக்கும் கிருஷ்ணா (கிருஷ்ணாவின் சுருக்கம்தான் இந்த க்ரிஷ்) அதன் பின்னர் தனது தந்தையை ஒரு ஆபத்தில் இருந்து காப்பாற்றுகிறார். இந்த இரண்டு படங்கள் அவை வெளியான காலங்களில் சக்கை போடு போட்ட படங்கள். இப்போ 2013, அதிகப்படியான சூப்பர் ஹீரோ படங்கள் ஹாலிவூட் திரையை துளைக்கும் போது, அவற்றுக்கு இணையாக இந்தியாவில் இருந்து ஒரு படமாக க்ரிஷ்  3 களம் இறங்கியிருக்கிறது. இனிமேல் இந்த படம் பற்றிப் பார்ப்போம்.


நம்ம ஹீரோ கிருஷ் இப்போ இந்தியாவுல மக்களால் கொண்டாடப் படும் ஒரு சூப்பர் ஹீரோ. அங்கங்கே சின்னதா நடக்கும் கொள்ளை, தீவிபத்து, விமான விபத்து என எது எங்க நடந்தாலும் அங்க ஆஜராகி மக்களை காப்பத்தறாரு. இது முழு நேர வேலை. பகுதி நேரமா வேறு நிறைய வேல செய்யறாரு, எங்கயுமே நிரந்தரமா தங்கறது கிடையாது, காரணம் வேலையில ஒழுங்கா கவனம் செலுத்தறது கெடயாது (spiderman - your friendly neighbourhood). திடீரென நம்ம 7 ஆம் அறிவு ஸ்டைல்ல உலகத்துல பல இடங்கள்ள மருந்தே கண்டுபிடிக்க முடியாத ஒரு "கொடிய நோய்"பரவுது. இதற்க்கு இடையில நம்ம Mystiqueஅம்மணி தகவலளிக்க வந்த ஒரு சயின்டிஸ்ட போட்டு தள்ளிடறாங்க. அப்படியே கட் பண்ணினா Professor X  ஒரு வில்லன் வடிவத்துல வார்ராரு, இவரு கண்டிப்பா ஒரு telepath தான்னு நினைச்சா இல்ல, இவரு Jean மாதிரி telekinetic, அப்பப்போ Magnetoமாதிரி அட்டகாசம் பண்றாரு, அப்புறம்தான் நமக்கு தெரியுது இவருதான் பிரதர் ஹூட் ஆப் ஈவில் மியுடன்ட்தலைவர்ன்னு. அவரு கூட்டத்துல நமக்கு பரிச்சயமான Toadஉட்பட பல காரெக்டர்ஸ் இருக்கு. அப்புறம்தான் நம்ம தலைவர் அவரோட சக்தி எங்கிருந்து வந்துச்சி, அவரோட உடலை எப்படி முழுமையா செயல்பட வக்கிறது போன்ற உன்னதமான கேள்விகளுக்கு விடை தேட ஒரு ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்கறதாவும், அதுக்கு பணம் புரட்டத்தான் இந்த 7 ஆம் அறிவு வேலை செய்யரதாவும் தெரியவருது. அப்புறம் இவுங்க மும்பயில நோயைப் பரப்ப (இதற்க்கு கடவுள் நம்பிக்கையை அழிச்சுட்டு தானே கடவுள் ஆகிடனும்ன்னும் ஒரு வியாக்கியானம் வேற), நம்ம க்ரிஷ் மற்றும் ரோஹித் ஒரு ஆண்டிடோட் கண்டுபிடிச்சு அமேசிங் ஸ்பைடர்மேன் ஸ்டைல்ல ஒரு Dispersion  Device  மூலமா மொத்த மும்பையையும் ஓவர் நைட்ல காப்பாத்திடராங்க (இங்க இவருக்கு சிலை வைப்பு வைபவம்  வேற). அப்புறமா, நம்ம DNAல இருந்து மட்டும்தானே நம்ம வைரசுக்கு மருந்து வரலாம், இது எப்படி வந்திச்சுன்னு வில்லன் ஆராய அப்புறம் என்னவாச்சின்னு avengers, மேன் ஆப் ஸ்டீல் பாணியில விடை சொல்லி முடிச்சிருக்காங்க படத்த. 


ஹாலிவூட் பசங்களுக்கு சூப்பர் ஹீரோ படங்கள் எடுக்கறதுல ஒரு லாபம் என்னன்னா அவங்க கிட்ட நூறு வருஷத்துக்கு மேல பழமையான பல சூப்பர் ஹீரோ - சூப்பர் வில்லன்கள் இருக்காங்க, இன்னாரு இன்னாரு, இவருக்கு இன்ன இன்ன பவர் இருக்கு, அது இப்படித்தான் வந்திச்சுன்னு யாரும் ஒக்காந்து யோசிக்கவும் தேவையில்ல, எப்படிடா இவனால இதெல்லாம் முடியும்ன்னு ரசிகர்கள் கேள்வி கேக்கப் போறதுமில்ல. மேக் அப்,  காஸ்ட்டியூம்லையே இவரு இன்னருதான்னு சொல்லிடுவாங்க. நம்ம இந்திய சினிமாவுல அப்படி கெடயாது. நமக்கு ஒரே சூப்பர் ஹீரோ தலைவர் ரஜினிகாந்த் தான். இல்லையின்னா புராணங்கள புரட்டனும். அதுதவிர என்னன்னாலும் ஆரம்பம் இருந்து முடிவு வரை பார்வையாளனுக்கு விஞ்ஞானபூர்வமா விளக்கனும். கடந்த ரெண்டு படங்கள்லயும் சூப்பர் ஹீரோவ உருவாக்கற பணியில வெற்றி பெற்ற இந்த கூட்டணி, இந்த முறை சூப்பர் வில்லன்கள உருவாக்குறதுல நிச்சயம் தோல்விதான். ஹாலிவூட்ல ஸ்பைடர் மேன்னா  இவுங்க இவுங்க வில்லன், அயன்மேன்ன்னா இவரு இவரு ன்னு எல்லா சூப்பர் ஹீரோக்களுக்கும் வில்லன் இருக்கு, இங்க ராமருக்கு ராவணன் தவிர, க்ரிஷுக்கு எல்லாம் வில்லன் கெடயாதுங்கறது, நமக்கு சூப்பர் ஹீரோ படம் பண்ணுறதுல எப்பவுமே இருக்கற ஒரு சவால் தான். ஆனா அந்த சவால ஒரு Ra.One - G.One  ரேஞ்சுலயாவது கையாண்டு இருக்கலாம்.  அத விட்டுட்டு படம் முழுவதுமே ஒரு மார்வெல் யூனிவேர்ஸ்ல நொழஞ்சிட்ட பீலிங் வர்ரத தவிர்த்திருக்கலாம். அப்புறம் அடுத்தவனுக்கு உதவி செய்ய நினைக்கற மனம்தான் க்ரிஷ்ன்னு "we are robin hood"ஸ்டைல்ல வலிந்து திணிச்ச தீம் கொஞ்சம் நெருடலா இருக்கு. 


பாசிடிவ் சைடுன்னா, VFX எக்ஸ்ட்ரா ஆர்டினரியா இருக்கு. ஹ்ரித்திக் ரோஷன் எப்பவும் போலவே படத்துக்காக ரொம்பவே உழைச்சிருக்காரு, க்ரிஷ்ன்னா இந்தாளுதான்யான்னு கன கச்சிதமா பொருந்திப் போறாரு. ரொம்ப நாளைக்கு அப்புறம் கங்கனா ரேனவாத்,  அப்புறம் தொட்டுக்க பிரியங்கா சோப்பரா. தொழில்நுட்ப ரீதியா படம் பட்டய கெளப்புது. அதே கவனத்த கதையிலும் செலுத்தியிருந்தா படம் சூப்பரா இருந்திருக்கும். நீங்க ஒரு மார்வல்பேனா இருந்தீங்கன்னா இந்த படம் உங்களுக்கு ஒரு வேலாயுதம் மாதிரி இருக்கும், படத்துல புதுசுன்னு சொல்லிக்க எதுவுமே இல்ல, எல்லாமே இதற்க்கு முன்னாடி நீங்க எங்கயாவது பார்த்த ஒன்னாதான் இருக்கும். இல்ல, மார்வல் யுனிவேர்சுக்கும் உங்களுக்கும் சம்பந்தமே இல்லையின்னு வச்சுக்கங்க, அப்பவும் இந்த படம் உங்களுக்கு ஒரு வேலாயுதம் மாதிரிதான்  இருக்கும். இந்திய சினிமாவுக்கு கொஞ்சமும் பழக்கம் இல்லாத கதைக் களம், மியுடன்ட்களின் விதவிதமான சக்தி, கலர் புல்லான ரெண்டு ஹீரோயின், பவர் புல்லான ஹீரோ, எக்ஸ்ட்ரா ஆர்டினரி மேக்கிங், லார்ஜெர் தான் லைப் ஆக்ஷன் சீக்குவன்ஸ்ன்னு செம இன்டரஸ்டிங்கான படம்.


டிஸ்கி 1: தீபாவளிக்கு மறுநாளே படம் பார்த்திருந்தாலும், படத்துக்கு விமர்சனம் எழுதற ஐடியா கொஞ்சமும் இருக்கல. என்னக்கி இந்த படம் இந்தியாவுல மட்டுமே இருநூறு கோடி வசூல தாண்டி, சென்னை எக்ஸ்பிரஸ் படத்தோட சாதனையை முறியடிக்கபோகுதுன்னு தெரிஞ்சிச்சோ, அன்னைக்கே இந்த படத்துக்கு விமர்சனம் எழுதணும்ன்னு முடிவு பண்ணிக்கிட்டேன். ஏன்னா வரலாறுல நம்ம பெயரும் வரனுமே.

டிஸ்கி 2: நீங்க ஒரு சூப்பர் ஹீரோ பட விசிறியா இருந்தா தயவு செய்து இந்த படத்த தவிர்த்துட்டு Thor: The Dark World பாருங்க. நம்ம பசங்க என்னதான் பண்ணியிருக்காங்க பார்ப்போமேன்னு க்ரிஷ் 3 பார்த்திங்கன்னா அதனால வார எந்த மன உளைச்சலுக்கும் கம்பெனி பொறுப்பேற்காது. சும்மா தமாசுக்கு ஒரு படம் பார்க்கணும்னா தாராளமா பாருங்க, தீபாவளி தமிழ் ரிலீசுக்கு இது எவ்வளவோ தேவல.  

டிஸ்கி 3: இந்தப் படம் ஒரு குடும்பப்படமான்னு சந்தேகமே வேணாம். கதை, திரைக்கதை, வசனம் இயக்கம், தயாரிப்பு அப்பா; ஹீரோ பையன், இசை சித்தப்பு, இதுக்கும் மேல ஒரு குடும்பப் படம் விசுவால கூட எடுக்க முடியாது. (டி ஆர் தவிர) 
Viewing all 74 articles
Browse latest View live